Pages

Thursday, December 19, 2019

கணக்கம்பாளையம் கிளை நிர்வாக சந்திப்பு 18/12/2019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 18.12.19 அன்று, மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் கணக்கம்பாளையம் கிளை  நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.



கணக்கம்பாளையம் கிளை பகுதியில் ஒரு சகோதரரின் இடத்தில் 02/02/2018 முதல் ஜும்ஆ மர்கஸ்  அமைத்து, ஜும்ஆ தொழுகைகள் நடைபெற்று வந்தது. அந்த இடத்தை நமக்கு வழங்கிய சகோதரருக்கு அந்த இடம் தேவை ஏற்பட்டதால் வரும் 31/12/2019 வுடன் காலி செய்து தரவேண்டி இருப்பதை பற்றியும்,

அந்த பகுதியில் புதிய இடத்தில் மர்கஸ் அமைத்து குழந்தைகள் மதரசா, ஐவேளைத்தொழுகை, ஜும்ஆ தொழுகை மற்றும் சமுதாய சேவைப்  பணிகளை  வீரியமாக செய்யும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கணக்கம்பாளையம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment