நன்றி அறிவிப்பு
கண்ணியத்திற்குரிய கிளை நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி 15/06/2020 திங்கள் கிழமை அன்று காலை 10:30 மணி முதல் 10:45வரை இணையவழி போராட்டத்தை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்தது.
தூரப்பிரதேசத்தில் துன்பப்படும் மக்களை மீட்க, அவர்களின் துன்பம் நீங்க நமது சக்திக்குட்பட்ட ஆரம்ப கட்ட உதவியாக அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் அமைந்த இந்த போராட்டத்தை
நமது மாவட்டத்தின் ஒவ்வொரு கிளை நிர்வாகிகளும் தமது பகுதிகளில் சிறப்பாக இந்த இணையவழி போராட்டத்தை சிறப்பாக நடத்தினீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
பாதிப்பிற்குள்ளான பொதுமக்களின் இன்னலை தீர்க்க உடனடியாக அறிவித்த இந்த போராட்டத்தை சிறப்பாக நடைபெற உழைத்த அணைத்து நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஜாக்கல்லாஹு ஹைரா..
அரசுகள் அந்த பாதிப்பிற்குள்ளான மக்களை விரைந்து தாயகம் அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
உரிய நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மக்களுக்கு உதவும் வகையிலும் அரசை நிர்பந்திக்கும் வகையில் அடுத்த கட்ட செயல்பாடுகளை மாநில தலைமை ஆலோசித்து அறிவிக்கும்.
இந்த இணையவழி போராட்டத்தில் இணைந்து ஒத்துழைத்ததை விட வீரியமாக வரும் காலத்தில் நீதிக்காக, நியாயத்திற்காக ஒத்துழைக்க அணைத்து கிளை நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
மாவட்ட தலைவர்,
திருப்பூர் மாவட்டம்.
கண்ணியத்திற்குரிய கிளை நிர்வாகிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து தாயகம் அழைத்து வர மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி 15/06/2020 திங்கள் கிழமை அன்று காலை 10:30 மணி முதல் 10:45வரை இணையவழி போராட்டத்தை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்தது.
தூரப்பிரதேசத்தில் துன்பப்படும் மக்களை மீட்க, அவர்களின் துன்பம் நீங்க நமது சக்திக்குட்பட்ட ஆரம்ப கட்ட உதவியாக அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் அமைந்த இந்த போராட்டத்தை
நமது மாவட்டத்தின் ஒவ்வொரு கிளை நிர்வாகிகளும் தமது பகுதிகளில் சிறப்பாக இந்த இணையவழி போராட்டத்தை சிறப்பாக நடத்தினீர்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
பாதிப்பிற்குள்ளான பொதுமக்களின் இன்னலை தீர்க்க உடனடியாக அறிவித்த இந்த போராட்டத்தை சிறப்பாக நடைபெற உழைத்த அணைத்து நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜஜாக்கல்லாஹு ஹைரா..
அரசுகள் அந்த பாதிப்பிற்குள்ளான மக்களை விரைந்து தாயகம் அழைத்துவர உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
உரிய நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மக்களுக்கு உதவும் வகையிலும் அரசை நிர்பந்திக்கும் வகையில் அடுத்த கட்ட செயல்பாடுகளை மாநில தலைமை ஆலோசித்து அறிவிக்கும்.
இந்த இணையவழி போராட்டத்தில் இணைந்து ஒத்துழைத்ததை விட வீரியமாக வரும் காலத்தில் நீதிக்காக, நியாயத்திற்காக ஒத்துழைக்க அணைத்து கிளை நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
மாவட்ட தலைவர்,
திருப்பூர் மாவட்டம்.
No comments:
Post a Comment