தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக #75வது_சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் #இரத்ததான_முகாம்
15-08-2021 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 வரை மங்கலம் சமுதாய கூடத்தில் பெருந்துறை அரசு மருத்துவமனை யுடன் இணைந்து நடைபெற்றது.
இந்த நிகழ்வில் TNTJ மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ், TNTJ மாவட்ட துணை தலைவர் யாசர் அராபத், இமாம் அபூபக்கர் சஅதி, மங்கலம் கிளை நிர்வாகிகள், பிற கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக இந்த சமுக சேவைப்பணியில் கலந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும்,
இரத்த தானம் வழங்கியவர்களுக்கும், சிறப்பாக ஏற்பாடுகள் செய்து மக்கள் நலப்பணி
செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை நிர்வாகத்திற்கும், அரசு மருத்துவமனை
சார்பில் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இந்த சமுதாய சேவைப்பணியில் ஆர்வமுடன் கலந்துகொண்ட, பணியாற்றிய, உதவியும்
ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் இறைவன்
நல்லருள் செய்ய பிரார்த்தனையையும், நன்றியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்
கிளை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்









No comments:
Post a Comment