Pages

Monday, February 07, 2022

கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் _ இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் 06/02/2022 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்தியன் நகர் கிளை தவ்ஹீத் பள்ளியில் கல்வி  வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.


மாநில மாணவரணி சகோதரர். ஷமீம் அவர்கள் “மாணவ மாணவியர்கள் என்னென்ன  படிப்புகளை தேர்வு செய்து படித்தால் வருங்காலத்தில் முன்னேற்றம் அடையலாம் என்றும்,

எந்தெந்த படிப்புகளுக்கு இந்திய, உலக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளது என தெளிவான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.

 

இந்த நிகழ்வில் சுமார் 70 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் தமது பொறுப்பாளர்களுடன் கலந்து தெளிவான வழிகாட்டுதல்கள் பெற்று சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 

No comments:

Post a Comment