தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் 08/03/2022 அன்று பெரியதோட்டம் கிளை மர்கஸில், மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் தலைமையில்,
மாவட்ட வர்த்தகரணி அப்துல்லாஹ் MISc., மாவட்ட மாணவரணி குழு இர்பான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் TNPSC GROUP 4 தேர்வு பற்றியும், அதை பயண்படுத்தி அரசு வேலைவாய்ப்புகள் பெறுவது பற்றியும் விளக்கம் வழங்கி,
அனைத்து சமுதாய மக்களையும் அதிகமான அளவில் இந்த தேர்வில் பங்கேற்க வைத்து அரசு பணிகள் பெற வழிகாட்ட,
இன்ஷாஅல்லாஹ் வரும் 13/03/2022 அன்று மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெறவுள்ள TNPSC GROUP 4 தேர்வு வழிகாட்டுதல் முகாமிற்கு பெருவாரியான இளைஞர்களை திரட்டி வந்து பங்கேற்ற அறிவுறுத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பெரியதோட்டம், செரங்காடு, VSAநகர், GKகார்டன்
ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் மக்களை திரட்டி வந்து கலந்து கொள்ளவதாக வாக்களித்தனர்
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment