Pages

Saturday, January 29, 2022

திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (4) 28/01/2022

 


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி மாவட்ட குழு ஆலோசனைக் கூட்டம் (4)


28/01/2022 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு VKP கிளை  மர்கஸில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர்  தலைமையில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது.



இதில் மாணவரணி மாவட்ட குழு  இந்தியன் நகர் இர்பான், ரஜாக்  
MSநகர் சிராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

ஆலோசனை கூட்டத்தில் ஆலோசித்து  எடுக்கப்பட்ட முடிவுகள்:

 1. கிளைகள் தோறும் வாக்காளர் அட்டை, ரேசன் கார்டு  திருத்தம் செய்யும் முகாம் நடத்த, வழிகாட்டுதல் வழங்குவது என்றும்,

2 அரசுப்பணியாளர்கள் தேர்வு Group 4 யாரெல்லாம் எழுதலாம்? என்ன பயன்? என்பதை பற்றி மாணவர்களை திரட்டி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது என்றும்,

3 மங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 கிளை மாணவரணி பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து  ஆலோசனை கூட்டம் நடத்தி மாணவரணி சேவைப்பணிகளை வீரியப்படுத்துவது என்றும்,

4.  மங்கலம் மற்றும் அதை சுற்றி உள்ள 6 கிளை மாணவரணிக்கு,  மாவட்ட  தர்பியா நடத்துவதும் என்றும் முடிவு செய்ய்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, January 26, 2022

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (13) _ 25012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 
25/01/2022 அன்று மாலை    மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் (13) மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில், திருச்சி V.S.முஹம்மது இப்ராகிம் திருமண  மண்டபத்தில்    நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த வாரத்தில் நடைபெற்ற  பணிகள் பற்றியும், வரும் வாரத்தில் செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும்  ஆலோசனைகள் செய்யப்பட்டது.

 

அதில் கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள 3 கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.


கிளைகள் இல்லாத, கொள்கை வாதிகள் ஆதரவாளர்கள்  உள்ள இரண்டு பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செயல்படுத்த  முடிவுகள் எடுக்கப்பட்டு, பொறுப்பாளர்கள்   நியமிக்கப்பட்டனர்.

 

மாவட்ட மாணவரணி சார்பில் மாணவரணி பணிகளை வீரியப்படுத்த கிளைகளை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 

மாவட்ட பேச்சாளர்கள், அனைத்து கிளை நிர்வாகிகளுக்கான  மாவட்ட தர்பியா  இன்ஷாஅல்லாஹ் பிப்ரவரி 27 ல் நடத்தலாம் என  முடிவு செய்யப்பட்டது.

 

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த அணைத்து கிளைப் பொறுப்பாளர்களுக்கும் பல்வேறு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

Sunday, January 23, 2022

புத்தூர் சகோதரர்களுடன் தாவா சந்திப்பு - 23012022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தூர் பகுதி சகோதரர்களுடன் தாவா சந்திப்பு  23/01/2022 அன்று 

மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட  செயலாளர் யாஸர்  அரபாத் முன்னிலையில் VKP கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

புத்தூர்  பகுதியில் வசிக்கும்  முஸ்லிம் மக்கள் சத்திய மார்க்கத்தை அறியாமலும், 
பல்வேறு அனாச்சாரங்களில் மூழ்கி வழிகேட்டில் செல்வதை தடுக்கும் வகையில், 

மார்க்க விழிப்புணர்வு தாவா பணிகளை செயல்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு

புத்தூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

சத்திய தவ்ஹீத் கொள்கை பிரச்சாரத்தை முன்னெடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள் விளக்கம் வழங்கினார்கள்.

அந்த சகோதரர்களும் தமது பகுதியில் சிறப்பான முறையில்  சத்திய பிரச்சாரத்தை கொண்டு செல்வோம் என ஆர்வமாக உறுதியளித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ் பணிகளுக்கு 78,405/= நிதி உதவி_ 21012022



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை கிளை மர்கஸ்  பணிகளுக்கு
, திருப்பூர் மாவட்ட அனைத்து கிளைகளிலும் 21/01/2022 அன்று ஜும்ஆ வசூல் செய்து வழங்கிய தொகை ரூ. 78,405/= (ரூபாய் எழுபத்தெட்டாயிரத்து நானூற்றி ஐந்து  மட்டும்) ...

அல்ஹம்துலில்லாஹ் !

 



இந்த பொருளாதாரத்தை  வழங்கிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், கிளை நிர்வாகிகள், பேச்சாளர்கள் ஒத்துழைத்த அனைவருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரா!!

கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா (3) _ படையப்பா நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23/01/2022 ஞாயிறு அன்று காலை 6:30 மணி முதல்   திருப்பூர் படையப்பா நகர் சுற்று வட்டார கிளை  நிர்வாகிகளுக்கான  தர்பியா   மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மதுரபீக் ,  தலைமையில் திருப்பூர் படையப்பா நகர் மர்கஸில் நடைபெற்றது 

இதில் படையப்பா நகர் சுற்று வட்டார  

1) படையப்பா நகர்
2) குமரன் காலனி  
3) S.V காலனி
4) M.S நகர்  

ஆகிய கிளைகளின் நிர்வாகிகள், பேச்சாளர்கள், கலந்து கொண்டனர்.




சகோதரர் அன்சர்.  MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில்  நிர்வாகிகள், பேச்சாளர்கள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும்,  தங்களின் நிர்வாக  திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும்  வழங்கினார்கள்.

இறுதியில் தர்பியா நிகழ்விலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் வழங்கியோரை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.




அல்ஹம்துலில்லாஹ்

கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா (2) _ மங்கலம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23/01/2022 ஞாயிறு அன்று காலை 6:30 மணி முதல்  திருப்பூர் மங்கலம் சுற்று வட்டார கிளை  நிர்வாகிகளுக்கான  தர்பியா 
 
மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட செயலாளர் யாஸர் அராபத்  தலைமையில் திருப்பூர் மங்கலம் மர்கஸில் நடைபெற்றது 


இதில் மங்கலம் சுற்று வட்டார  

1) மங்கலம் 
2) இந்தியன் நகர்  
3) சின்னவர்தோட்டம்  
5) RP நகர்  
6) வடுகன்காளிபாளையம் 
7)  அவிநாசி 

ஆகிய கிளைகளின் நிர்வாகிகள், பேச்சாளர்கள், கலந்து கொண்டனர்.


சகோதரர் சுஜாஅலி  MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில்   நிர்வாகிகள், பேச்சாளர்கள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும்,  தங்களின் நிர்வாக  திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும்  வழங்கினார்கள்.






இறுதியில் தர்பியா நிகழ்விலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் வழங்கியோரை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்