Pages

Thursday, February 27, 2020

*திருப்பூர் மாவட்ட அவசர செயல்வீரர்கள் கூட்டம்* 26022020



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 26/02/2020  அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில்  மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்  *திருப்பூர் மாவட்ட அவசர செயல்வீரர்கள் கூட்டம்* நடைபெற்றது.


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் தொடர் போராட்டத்தின் ஒன்றாக,


மாநில நிர்வாகம் அறிவித்த *பிப்ரவரி 29 மாநிலம் தழுவிய தர்ணா* போராட்டத்தை நடத்துவதற்க்கான



கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் கிளை சகோதரர்கள் கலந்து கொண்ட*அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


இதில் மாநில செயலாளர். நெல்லை பைசல் அவர்கள் *பிப்ரவரி 29 மாநிலம் தழுவிய தர்ணா*  ஏன்? எதற்கு? என்பதை 


தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம்  ஏன்

 இந்தியாவில் வாழும்  இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள் என அனைவரும் தங்கள் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று

மத்திய அரசு  குடியுரிமை திருத்த சட்டத்திதை நிறைவேற்றி உள்ளது.நமது குடியுரிமையை நிரூபிக்க பிறப்பு சான்றிதழை காட்ட வேண்டும்.

பிறப்பு சான்றிதழ் யாரிடம் இல்லையோ அவர்கள் NRC  சட்டத்தின் மூலம் இந்தியர்கள் அல்லாதவர்கள் என்று  கருதப்படுவார்கள்.
இவ்வாறு நாம் அகதிகளாக்கப்பட்டால் தொழில் செய்ய முடியாது. நமது ஊரை விட்டும்,தெருவை  விட்டும்,நமது வீடுகளை விட்டும் நாம் வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் அடைக்கப்படுவோம்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களை விட முஸ்லிமல்லாதவர்கள் தான்.

நமது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அகதி முகாமிற்கு  செல்வதை  தடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

ஒவ்வொரு வீடுகளிலும் வயது முதிர்ந்தவர்கள்  இறப்பு சான்றிதழ் இல்லாமல் இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

 இந்திய மக்களை அகதிகளாக மாற்றும்  கொடிய சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்ஷா அல்லாஹ் வரும் பிப்ரவரி 29 தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் நடைபெற உள்ளது.


இதில் நாம் குடும்பத்தோடு பங்கேற்று நமது உரிமையை நமது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் அகதி என்ற நிலையை அகற்றி இந்திய மக்களை காப்போம். என சிறப்பாக எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இன்ஷாஅல்லாஹ் நாம் நடத்தவுள்ள *பிப்ரவரி 29 மாநிலம் தழுவிய தர்ணா* க்கு பெருவாரியான மக்களை அழைத்து பொதுமக்கள், அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்துவது என்றும்,


இந்த CAA, NRC, NPR அணைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சட்டங்கள் என்பதை வெகுஜனங்கள் மத்தியில் பிரசுரங்கள், தனிநபர் பிரச்சாரங்கள் மூலம் கொண்டு செல்வது என்ற உறுதியோடும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

பத்திரிகை செய்தி :




தினத்தந்தி 27/02/2020

No comments:

Post a Comment