Pages

Wednesday, May 27, 2020

பித்ரா2020 _ திருப்பூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பித்ரா #பெருநாள்_தர்மம் ₹5,67,117/- (ரூபாய் ஐந்து இலட்சத்தி அறுபத்தி ஏழாயிரத்து, நூற்றி பதினேழு) மதிப்புள்ள அரிசி, உணவுப்பொருள்கள், மற்றும் உணவிற்காக பொருளாதாரமாக, 1598 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ஏழைகளும் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாடிட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் போதனையை ஏற்று பொருளாதார உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் பேரருள் புரிவானாக..!

பல்வேறு களப்பணிகளுக்கும் மத்தியில் இப்பணியையும் செவ்வனே செய்த திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும், களப்பணியாளர்களுக்கும் இறையருளைப் பிரார்த்தித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஜாக்கல்லாஹு ஹைரன்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருப்பூர் மாவட்டம்.

No comments:

Post a Comment