Pages

Thursday, August 06, 2020

உடுமலை, சாதிக் நகர், ஆண்டியகவுண்டனூர் கிளைகள் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 05/08/2020 அன்று  உடுமலை, சாதிக் நகர், ஆண்டியகவுண்டனூர்  கிளைகள் சந்திப்பு, உடுமலை கிளை  மர்கஸில்

 மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரஷீத் அவர்கள்   தலைமையில் மாவட்ட பொருளாளர்அப்துர்ரஹ்மான்   மற்றும்  கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்றது.




கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய  வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

 தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நோயாளிகளுக்கு  அவசியம் தேவையான இரத்தம் பற்றாக்குறை  நிலவுவதை கருத்தில்  கொண்டு,  இந்த மாதம் முழுவதும் ஜமாஅத் சார்பில் இரத்த தான முகாம்கள் நடத்த  மாநில நிர்வாக அறிவுருத்தலை விளக்கி கிளை சார்பில் இரத்த தான முகாம் நடத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

 

 

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை  பரிமாறி உடனடியாக  நன்மையான  செயல்பாடுகளில்  ஒத்துழைக்க   வாக்களித்தனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment