Pages

Saturday, October 10, 2020

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/10/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு  கூட்டம் 09/10/2020 வெள்ளிக்கிழமை   மாலை  5:30  மணி  முதல்   மாவட்ட   அலுவலகத்தில்  மாவட்ட  தலைவர்  நூர்தீன்   தலைமையில், 




மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட  பொருளாளர்   அப்துல்ரஹ்மான்,   மாவட்ட  துணைத் தலைவர்  யாசர் அரபாத்,   துணைச் செயலாளர்கள்   சேக் பரீத்,  அப்துர்ரஷீத்,  ரபீக், 

மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி , மற்றும் மாவட்ட  வர்த்தகரணி  செயலாளர்   ஜாகிர்    ஆகியோர்   கலந்து கொண்டு  நடைபெற்றது

கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும்  இனி செய்யவேண்டிய பணிகள்  பற்றியும்   விரிவாக   தகவல்   பரிமாறப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் இயங்கும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தின் தேவைகளை பற்றி ஆலோசித்து,  உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது.

தேனி மாவட்ட மர்கஸ் பணிகளுக்கு இந்தமாத மூன்றாம் வார (16/10/2020 ) ஜும்ஆ வசூல் செய்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள்   வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, October 06, 2020

பெரிய தோட்டம் கிளை பொது மசூரா 5 10 2020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 5.10.2020 அன்று இஷா தொழுகைக்கு பின் பொது மசூரா நடைபெற்றது



இதில் கிளை புதிய பொறுப்பாளரான மாவட்ட துணைசெயலாளர் ரபீக் அவர்கள் நிர்வாகிகளுக்கு அறிமுகம், அறிவுரை, தாவா பணிகள் வீரியமாக செய்ய ஆலோசனைகள் மற்றும் கிளையின் நிறை குறைகளை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, October 05, 2020

உடுமலை நகரம்& சாதிக் நகர் கிளைகளின் பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 5 10 2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரம்& சாதிக் நகர் கிளைகளின்  பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 5 10 2020 அன்று உடுமலை கிளை மர்கஸில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் அப்துல் ரஷீத்  அவர்கள் தாவா பணிகளின் அவசியமும், கடமையும் எனும் தலைப்பில் வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

 

கிளை நிர்வாகம் சார்பில் இன்ஷாஅல்லாஹ் 

வாரம் ஒரு பெண்கள் பயான்,

மாதம் ஒரு பொது ஆலோசனை கூட்டம்,

மாதம் ஒரு தர்பியா

மாதம் ஒரு மதரசா பரிசளிப்புபெற்றோர்சந்திப்பு

மாதம் ஒரு எளிய மார்க்கம் அல்லது இனிய மார்க்கம்

குழு தாவா மூலம் மக்களை அழைப்பது

ஆதரவாளர்களை உறுப்பினர்களாக இணைப்பது 

உள்ளிட்ட  வருங்கால தாவா திட்டங்களை   நடைமுறைப்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் இன்று ...

 திருப்பூர் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி கீழ் தளத்தில் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் இயங்கி வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய மார்க்கத்தை தூய வடிவில் அறிந்து இம்மை மறுமை வாழ்க்கைக்கு பயண்படும் மார்க்க கல்வியை வழங்கும் அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம்
இன்று ...



ஆலிமா வகுப்பு



தீனியாத் வகுப்பு

அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம் மென்மேலும் வளர்ச்சியடைந்து கல்விச்சேவையில் சிறந்து விளங்க உங்கள் பிரார்த்தனைகளையும், ஒத்துழைப்பையும் கேட்டுக் கொள்கிறோம்.

: அல்கைராத் பெண்கள் இஸ்லாமிய கல்வியகம், திருப்பூர்.
தொடர்புக்கு: 7094465552, 6369634750

Sunday, October 04, 2020

படையப்பா நகர் கிளை பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 4 10 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் படையப்பா நகர் கிளை பொது ஆலோசனை கூட்டம் (பொது மசூரா) 4 10 2020 அன்று படையப்பா நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.


மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் சித்தீக் அவர்கள் கலந்துகொண்டு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்