தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட செயற்குழு 07/01/2022 அன்று மாலை 4:30மணி முதல் மாவட்ட தலைமையகத்தில் மாவட்டத் தலைவர் சிக்கந்தர் அவர்கள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோதரர். அப்துல்லாஹ் MISc., அவர்கள்
இறையச்சமே நமது வெற்றிக்கு அடிப்படை எனும்
தலைப்பில் ஆரம்ப உரை நிகழ்த்தினார்.
மாவட்ட துணை செயலாளர் சகோதரர். அப்துர்ரஷீது அவர்கள்
ஆண்
பேச்சாளர்கள் சம்பந்தமாகவும், இணையதள செய்திகள் சம்பந்தமாகவும் கிளைகள் எவ்வாறு
செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் சகோதரர். காஜா பாய் அவர்கள்
பெண்பேச்சாளர்கள்
சம்பந்தமாகவும், பெண்கள் பயான் நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும் கிளைகள் எவ்வாறு
செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் சகோதரர். நூர்தீன் அவர்கள்
காவல்துறை, அரசு துறை அதிகாரிகள் சந்திப்பின் அவசியம் பற்றியும், அதற்க்கான வழிகாட்டுதல் வழங்கினார்கள் மற்றும் நோட்டீஸ், பிளக்ஸ், DTP , போஸ்டர் , போஸ்டுகள், ஸ்டிக்கர்கள் என அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தில் ஒப்புதல் பெறுவதின் அவசியம் சம்பந்தமாகவும் கிளைகள் எவ்வாறு செயல்பட்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோதரர். அப்துல்லாஹ் MISc., அவர்கள்
மக்தப் மதரஸா
மேம்பாடு குழு சம்பந்தமாகவும், மதரஸாக்களை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கி, மாவட்ட நிர்வாக
ஆலோசனைகளை படிவம் வடிவில் கொடுக்கப்படும் அதை கிளைகள் செயல்படுத்தி ஒத்துழைப்பு
வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட பொருளாளர் சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள்
கிளை நிர்வாகம் சார்பில் வரவு, செலவு விபரங்கள், வங்கி கணக்கு விபரங்களை எவ்வாறு பராமரிப்பது, என்றும் மாதாந்திர வரவு செலவு அறிக்கை
மாவட்டத்திற்கு அனுப்புவதன் அவசியம் பற்றியும், மாவட்டம் சார்பில் வழங்கப்படும் படிவங்களை
கிளைகள் பயன்படுத்தி ஒத்துழைப்பு
வழங்கவேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட தலைவர் சகோதரர். சிக்கந்தர் அவர்கள்,
புதிய ஆண் , பெண் பேச்சாளர்களை உருவாக்கும் பயிற்சி வகுப்பு துவங்குவது பற்றியும், பிறமொழி பேசும் மக்களுக்கு தாவா செய்ய குழு உருவாக்குவது பற்றியும், மற்றும் நமது ஜமாஅத்தின் நடுநிலை சமுதாயம் வார இதழ் பொதுமக்களை சென்றடைய நிர்வாகிகள் எவ்வாறெல்லாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.மக்ரிப் தொழுகைக்கு பிறகு
மாநில பொதுச் செயலாளர் சகோதரர் அப்துல் கரீம். MISc.,.அவர்கள்
சமரசமில்லா சத்திய கொள்கை எனும் தலைப்பில் சத்திய இஸ்லாமிய மார்க்க
அடிப்படை கொள்கையை, நமது ஜமாஅத் எவ்வித
சமரசம் இல்லாமல் கடைபிடிப்பதை விளக்கி, ஒவ்வொரு நிர்வாகியும், பேச்சாளர்களும் வீரியமாக சத்திய கொள்கையை பிரச்சாரம் செய்து, தமது வாழ்வில் கடைபிடித்து இவ்வுலகிலும்,
மறுமையிலும் வெற்றி பெறுவோம் என உரை நிகழ்த்தி ஆலோசனைகளை வழங்கினார்கள்
மாவட்ட துணைத்தலைவர் சகோதரர். ஜாகிர் அப்பாஸ் அவர்கள்,
திருமணம் நடத்தி வைக்க கிளை நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வரும் போது, திருமண படிவத்தில் உள்ள
நமது ஜமாஅத்தின் வழிகாட்டுதல்களை விளக்கி பரிந்துரை செய்யவேண்டும் என்றும், குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி வருவோருக்கு
கிளை நிர்வாகிகள் உரிய முறையில் தகவல்களை
அறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை
அனுப்பி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்கள்.
மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோதரர். அப்பாஸ் அவர்கள்
இரத்ததான சேவைகளை சிறப்பாக
செயல்படுத்த கிளைகள் இரத்ததான கொடையாளர் விபரங்களை சேகரிப்பது பற்றியும், மருத்துவ
உதவி பற்றிய கோரிக்கைகள் வந்தால் எவ்வாறு செயல்படுவது என்றும் ஆலோசனைகளை
வழங்கினார்கள்.
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.ரபீக் அவர்களின் நன்றியுரை மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment