Pages

Monday, October 26, 2020

கோவை மண்டல செயற்குழு 25.10.2020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகத்தின் சார்பில் கோவை மண்டல செயற்குழு 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.


இதில் மாநில செயலாளர். சகோ. E.பாரூக், கோ. காஞ்சி இப்ராஹிம், மற்றும் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
ஜமாஅத்தின் சேவை அமைப்புகள் முதியோர் இல்லம், சிறுவர் இல்லங்கள் , ஆண்கள் பெண்கள் தாவா சென்டர்கள், MISc., இஸ்லாமிய கல்லூரி மற்றும் ஹிப்ளு மதரசா    செயல்பாடுகள் பற்றியும், 
அதற்க்கான உண்டியல் வசூல் பங்களிப்பு பற்றியும் மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு பற்றியும் ஆர்வமூட்டினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

இளைஞர்களுக்கான தர்பியா _ இந்தியன் நகர் கிளை _25102020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சார்பாக 25/10/2020 அன்று இளைஞர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.




இதில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் இறைவன் விரும்பும் இளமை பருவம் என்ற தலைப்பிலும்,

சகோதரர்- இத்ரீஸ் அவர்கள் ஹராம்ஹலாலை பேணுவோம் என்ற தலைப்பிலும்,


சகோதரர்- இம்ரான் அவர்கள் களை எடுப்போம் களம் காண்போம் என்ற தலைப்பிலும்,


சகோதரர்- இர்பான் அவர்கள் உள்ளத்தால் மாற்றம் அடைவோம் என்ற தலைப்பிலும்,



உரையாற்றினார்கள்.





இளைஞர்கள் பெண்கள் உட்பட சுமார் 250 நபர்களுக்கு மேல் கலந்து பயன்பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

VKP கிளை மதரஸா ஆசிரியர்கள் / மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக  25-10-2020 அன்று VKP  கிளை   மதரஸா ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது 



மக்தப் மதரஸாவை மேம்படுத்துவது சம்பந்தமாக 

மாவட்ட மதரஸா பொறுப்பாளர் சகோ. யாஸர் அரபாத் அவர்கள்  மதரஸா ஆசிரியர்களிடம் மதரஸா சம்பந்தமாக கேட்டறிந்து அதனை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.


அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர் _ VKP 25102020

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையில் 2510-2020 அன்று பிறமதத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பள்ளிக்கு வருகை தந்தனர்.



அவர்களுக்கு சகோ.யாஸர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் வழங்கினார்


அதை தொடர்ந்து வந்திருந்த மூன்று பேரும் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுகொண்டனர்.

அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம்,மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்