Pages

Friday, December 11, 2020

ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  11/12/2020 அன்று ஆண்டியகவுண்டனூர்    கிளை  சந்திப்பு   ஆண்டியகவுண்டனூர் கிளை மர்கஸில்    ஜும்ஆ விற்கு பிறகு  மாவட்ட  பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 

கிளையின் தாவா பணிகள் குறித்தும் தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் இளைஞர்கள் செய்ய வேண்டியவை பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும்,  தனி நபர் தாவா செய்வது பற்றியும், தர்பியா நடத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

Thursday, December 10, 2020

இந்தியன் நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  10/12/2020 அன்று காலை இந்தியன் நகர்     கிளை   சந்திப்பு   இந்தியன் நகர்  மர்கஸில்     மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ்   அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 


கிளையின் தாவா பணிகள் குறித்தும் தாவா பணிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.


இலக்கை நோக்கி வா இளைஞனே என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் தனி நபர் தாவா செய்வது பற்றியும்,  ஆலோசனைகள் வழங்கப்பட்டது..


அல்ஹம்துலில்லாஹ்

ஆம்புலன்ஸ் சேவை

 தமிழ் நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 

சலுகை கட்டணத்தில் அணைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை 

தொடர்புக்கு : 8122622220, 8122622221



இந்த சேவைப்பணிக்கு உங்களின் ஒத்துழைப்புகளை தாரளமாக வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 

Tuesday, December 08, 2020

மாநில நிர்வாக சந்திப்பு - குமரன் காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளை மர்கஸ் இடத்தை மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்களுடன்  மாநிலச் செயலாளர் சகோதரர் கோவை T.அப்பாஸ் அவர்கள் 7/12/2020 அன்று நேரில் பார்வையிட்டு, 



மார்க்கப் பணிகள், சமுதாய சேவை பணிகளை வீரியமாக செய்வதற்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் 

Monday, December 07, 2020

இலவச புக் ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 6/12/2020  ஞாயிறு காலை 9.மணி முதல்  சாதிக்பாட்சா நகர் பகுதியில்  அமைக்கப்பட்டது. 

அதில் 30 க்கும் மேற்பட்ட பிறகொள்கை மற்றும் பிற மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி   சுமார் 60 மார்க்க விளக்க  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 



பிற மத  சகோதரர்கள்  விரும்பி கேட்டதற்கினங்க திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்  திருக்குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகளை விளக்கி சகோ. அப்பாஸ் அவர்கள்  (மங்கலம்) அவர்கள்  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார் 

அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான தர்பியா _உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 அசர் தொழுகைக்கு பின்  5 மணியிலிருந்து 8 மணி வரை பெண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது. 




 இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் 

நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞிர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்


மார்க்க கேள்விகள் கேட்டு சரியான பதில் வழங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


ஆண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. 


அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு - சின்னவர் தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சின்னவர் தோட்டம் கிளை சார்பில் 06/12/20 அன்று மாலை5:15 மணிக்கு ஆண்கள் & பெண்கள் மக்தப் மதரசா பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது 


அதில் முதலாக சகோ தவ்பிக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் குழுந்தை வளர்ப்பு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்   

இரண்டாவதாக சகோ  யாசர்அரபாத் அவர்கள் பெற்றோர்களின் கவனத்திற்கு என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 


மதரசாவிற்கு லீவு எடுக்காமல் வந்த மாணவ மாணவியர்களுக்கு கிளை சார்பில் ஊக்கப் பரிசுகள்  வழங்கப்பட்டது.

இறுதியாக  குறை நிறைகள் கேட்கப்பட்டது  


அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06-12-2020 அன்று கிளையில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கான நவம்பர் மாத பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளர் சகோ.ரபீக் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. 


இதில் முதலாவதாக சகோ. அப்துல் ரஹ்மான் (MISC) அவர்கள் "மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

கடந்த நவம்பர் மாதம் முழுவதும் இருநேர  மதரஸா வகுப்பிற்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ச்சியாக மதரஸாவிற்கு வருகை தந்த  9 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


மேலும் தொழுகை ஒழுக்கம் என அனைத்து  செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற 2  மாணவ மாணவிகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. 

குர்ஆனின் 30ம் பாகம் முழுவதும் மனனம் செய்த  A.சுஹைப் என்ற  மாணவரின் ஆர்வத்தை மென்மேலும் அதிகப்படுத்தும் நோக்கில் 6-12-2020 அன்று கிளையில்  நடைபெற்ற பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சியில்   மாவட்ட துணைச்   செயலாளர் சகோ.ரபீக் அவர்கள் ஊக்கப் பரிசு வழங்கினார்

அதைதொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசுகளாக பேனா வழங்கப்பட்டது. 


வரக்கூடிய நாட்களில்  அனைத்து மாணவ மாணவிகளும் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டது.


அதை தொடர்ந்து மதரஸா  சம்பந்தமான குறைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றோர்களிடம்  கேட்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

இலவச புத்தக விநியோகம் _ அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 06/12/20, அன்று மாலை 5 மணியளவில் புக்ஸ்டால் போடப்பட்டது.

இதில் பிற மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளித்து அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, December 06, 2020

ஆண்களுக்கான தர்பியா _ உடுமலை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சாதிக் நகர் கிளை சார்பாக 06.12.2020 பஜர் தொழுகைக்கு பின்  6 மணியிலிருந்து 8 மணி வரை ஆண்களுக்கான தர்பியா உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் நடைபெற்றது. 



இதில் சகோ. சுஜா அலி MISC அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா எனும் தலைப்பில் 

நல் ஒழுக்கங்கள் குறித்தும், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் கடமைகள் குறித்தும் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்