Saturday, February 08, 2020

M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு 07/02/2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 07/02/2020அன்றுமாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் M.S.நகர் கிளை நிர்வாக  சந்திப்பு  நடைபெற்றது.


M.S.நகர் பகுதியில் நிறுத்தப்பட்டு இயங்கிவந்த மாவட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மாற்றம் காரணமாக மாவட்ட மர்கஸ் உள்ள கோம்பைத்தோட்டம்  பகுதிக்கு மாற்றம் செய்யப்பட காரணங்களை கிளை நிர்வாகிகள் கேட்டறிந்தனர்.



அந்த ஆம்புலன்ஸ் பணிகளால் M.S.நகர் பகுதியில் அணைத்து சமுதாய மக்களுக்கும் சமூக சேவை செய்யப்பட்டு வந்ததால் மீண்டும் தமது கிளை பகுதியில் ஆம்புலன்ஸ் இயங்க கோரிக்கை வைத்தனர்.


மாவட்ட ஆம்புலன்ஸ் அணைத்து பகுதிக்கும் பயன்படும் வகையில் இயக்கப்படும் என்பதை தெரிவித்து,
சமுதாய சேவைப்  பணிகளை  வீரியமாக செய்யும்  வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் M.S.நகர் கிளை   நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 07/02/2020


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 07/02/2020 அன்று மாலை 7:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.



இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இன்ஷாஅல்லாஹ் 09/02/2020 அன்று மங்கலம், மற்றும் உடுமலையில்  அணைத்து ஜமாஅத் அமைப்புகள் சார்பில் நடக்கவுள்ள குடியுரிமை திருத்த சட்ட கண்டன  பொதுக்கூட்டங்களில்  சமுதாய நலனுக்குக்காக அந்தந்த பகுதி கிளை சார்பில் பெருமளவில் மக்களை திரட்டி கலந்து கொள்ள ஏற்கனவே அறிவிருத்தப்பட்ட நிலையில் பொறுப்பாளர்கள் கூடுதலாக கிளைகளுக்கு நினைவூட்டி பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.

மாவட்ட அம்புலன்ஸ் ஐ ஏற்கனவே இயக்கி பணி  முடிவு பெற்ற சகோதரருக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.