தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று
காலை உடுமலை நகரம் மற்றும் சாதிக் நகர் கிளை மடத்துக்குளம் கிளை ஆண்டியக்கவுண்டணுர் கிளை ஆகிய கிளைகள் இனணந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.
காலை உடுமலை நகரம் மற்றும் சாதிக் நகர் கிளை மடத்துக்குளம் கிளை ஆண்டியக்கவுண்டணுர் கிளை ஆகிய கிளைகள் இனணந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு தங்களது
பலத்த எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பலத்த எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திடலைச் சுற்றிலும் குடியுரிமை திருத்த சட்டம், மற்றும் நாட்டுப்பற்று குறித்த தங்களின் அறிவுப்பூர்வமான தகவல்களை எழுதி மக்களின் பார்வைக்கு வைத்தார்கள்.
மாநில செயலாளர் காஞ்சி இப்ராகிம்... பேசியபோது....
மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரசீத், கிளை தலைவர் அப்துல்லாஹ், முஹம்மது அலி ஜின்னா, மற்றும் இத்ரீஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும் எதிரானதாகும்.
இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க ஒருவர் தனது பிறப்புச் சான்று முதல் தகப்பனார், பாட்டனார் பிறப்புச் சான்றிதழ் வரை சமர்ப்பிக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது.
இதனால் இந்தியாவில் வாழும் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு அகதி பட்டியலிலேயே சேர்க்கப்படுவார்கள்.
அசாமில் அகதிகளாக குடியேறிய மக்களை கண்டறிய இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசாங்கம் சொல்லிவிட்டு, தற்போது கொல்லைப்புறமாக இந்தியா முழுவதும் இக்கொடிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்கிறது.
தமிழகத்தில் வாழ்கிற மக்கள் பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்கள் இல்லை என்கிற பொழுது இவர்களுக்கு இந்த சட்டம் எப்படி பொருந்தும் இவர்கள் ஏன் தனது குடியுரிமை நிருபிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் குடியுரிமை கேட்டு வருகின்றனர் அவர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை மறுத்து இருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க மாட்டார்கள் இவர்கள் அனைவருமே NRC சட்டத்தில் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரிந்தும் தமிழக அரசாங்கம் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.
CAA,NRC, NPR, சட்டத்தை ஆதரித்த பல மாநில முதல்வர்கள் கூட தற்போது அந்த சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.
மேற்கு வங்கம், பஞ்சாப், பீகார், , பாண்டிச்சேரி, கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
தெலுங்கானாவில் அமைச்சரவையில் இந்த சட்டத்திற்கு எதிராக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் சட்ட மன்றத்தில் தீர்மானமாக இயற்றப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அறிவித்துளார்.
மாநில மக்களின் உரிமையை மாநில அரசாங்கங்கள் பாதுகாத்தது போல தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசாங்கம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் பேசினார்.
மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரசீத், கிளை தலைவர் அப்துல்லாஹ், முஹம்மது அலி ஜின்னா, மற்றும் இத்ரீஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்





No comments:
Post a Comment