Monday, August 15, 2022

இரத்ததான முகாம் மங்கலம் கிளை _14/08/2022

 76 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை



மற்றும் பெருந்துறை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து  மாபெரும் இரத்ததான முகாம்

14/08/2020 அன்று மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது




அரசு மருத்துவமனை குழுவினருடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை, நிர்வாகிகள் மற்றும் TNTJ தொண்டரணி சகோதரர்கள் ஆர்வமுடன் களப்பணி யாற்றினார்கள்.

 

 

59 இரத்த கொடையாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு   51  யூனிட் இரத்ததை தானமாக வழங்கினார்கள்.

 

 

எல்லா புகழும் இறைவனுக்கே




 மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து   உழைத்த  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மங்கலம்  கிளை நிர்வாகத்தை மங்கலம் ஊராட்சி தலைவர் மற்றும் பிரமுகர்கள் நேரில் வந்து பாராட்டும் ஆதரவும் தெரிவித்தனர்.  





இந்த மனித நேய சேவை முகாமில் கலந்து கொண்ட அணைத்து இரத்தக்கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள், மற்றும்  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



அரசு மருத்துவர்கள், மற்றும்  மருத்துவ உதவியாளர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


 


மனித உயிர் காக்க கூடிய உன்னத சேவையாக இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து  உழைத்த  மங்கலம்  கிளைக்கு பாராட்டு நற்சான்றிதழ் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்டது

 

 

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment