தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் *மாவட்ட செயற்குழு* 04/07/2021 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:45 மணி முதல் 12:45 மணி வரை
TNTJ திருப்பூர் மாவட்ட மர்கஸ் (கோம்பைத்
தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி) வளாகத்தில்
மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஆரம்பமாக மாவட்ட பேச்சாளர்
சகோதரர். அபூபக்கர் சஅதி அவர்கள் இறை
அச்சமே வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் அறிவுரைகளுடன் துவங்கியது
மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் முதல் வரையான வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் மாவட்ட பெண்கள் கல்லூரி அல்கைராத் பற்றியும்,
கல்வியகத்தை புதிய வாடகை இடத்தில் விரிவுபடுத்தியுள்ளதையும்
வருங்கால மேம்பாட்டு திட்டங்கள் பற்றியும் விளக்கம் வழங்கி அதற்கு கிளை நிர்வாகிகளின் ஒத்துழைப்பு
வழங்கவும் கேட்டுக்கொண்டார்
மாவட்ட துணை செயலாளர் ஷேக் பரித் அவர்கள் அல்கைராத் மதரசா
செவினங்களுக்கும் மேம்பாடு பணிகளுக்கும் தொடர் நிதி வசூல் வழங்க கேட்டு
வாக்குறுதிகளை பெற்றார்.
மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் அவர்கள் நிர்வாக
மாற்றங்களான வர்த்தகரணி செயலாளர் காஜா
பாய், PRO மற்றும்
மாணவரணி செயலாளர் அபூதாகிர் நியமனம், அல்கைராத் மதரசா வசூல் பொறுப்பாளராக மாவட்ட
துணை செயலாளர் ஷேக் பரித் நியமனம், பற்றி அறிவித்தார்.
மாணவரணி செயலாளர் சகோதரர். அபூதாகிர்
அவர்கள் சமூக சேவைப் பணிகளும் , மாணவரணியின் பங்கும் எனும் தலைப்பில் விளக்கம்
வழங்கி கிளைகள் மாணவரணி நியமித்து சமூக பணிகளை செய்ய ஆர்வமூட்டினார்
மாவட்ட துணை செயலாளர் அப்துர்ரஷீது அவர்கள் வருங்கால தாவா பணிகளை
வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை வழங்கினார்கள்.
மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதர். கோவை ரஹீம் அவர்கள்
“ மாநில பொதுக்குழு மற்றும் மாநில நிர்வாகக் தேர்வு” மற்றும் நடுநிலை சமுதாயம் வார இதழ் பற்றிய
விளக்கங்கள் வழங்கி ,
கிளை நிர்வாகிகள் பொதுகுழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு மாநில நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய
கேட்டுக்கொண்டார்.
இந்த செயற்குழுவில் கிளை
நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து சிறப்பாக
நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்






No comments:
Post a Comment