Sunday, January 30, 2022

உடுமலை சுற்று 3 கிளை மாணவரணி சந்திப்பு 30012022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  மாணவரணி சார்பாக 

30012022  அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு உடுமலை கிளை மர்கஸில்,  மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் தலைமையில்,
உடுமலை சுற்று 3 கிளை மாணவரணி சந்திப்பு நடைபெற்றது.

இதில் உடுமலை, ஆண்டிய கவுண்டனூர், மடத்துக்குளம் கிளை மாணவரணி சகோதரர்கள் கலந்து கொண்டனர்

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் அவர்கள்  

மாணவரணி பணிகளின் முக்கியத்துவம் குறித்தும், வருங்காலத்தில்  மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவது குறித்தும், 

Group 4 தேர்வு உள்ளிட்ட
அரசுப்பணியாளர்கள் தேர்வுகளுக்கு  மாணவர்களை திரட்டி வழிகாட்டு நிகழ்ச்சி நடத்துவது பற்றியும்,

இன்ஷாஅல்லாஹ் 06/02/2022 அன்று மாநில மாணவரணி சமீம் அவர்கள் கலந்து கொள்ளும் மாணவரணி வழிகாட்டி நிகழ்ச்சி உடுமலை பகுதியில் நடத்துவது பற்றியும் 

தனிநபர் தாவா, தர்பியா உள்ளிட்ட பணிகளை செய்யவும் அனைவரும் ஒத்துழைக்க சிறப்பாக செயல்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment