தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் *மாவட்ட செயற்குழு* 20/09/2020 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10:15 மணி முதல், 2:௦௦ மணி வரை
இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் சகோதரர். இம்ரான் அவர்கள் தாயிகளின் கடமை எனும் தலைப்பிலும்,
சகோதரர். *காஞ்சி இப்ராஹிம்* (மாநில செயலாளர்) அவர்கள் நிர்வாகிகளின் கடமை எனும் தலைப்பிலும்,
மாவட்ட தலைவர் சகோதரர். நூர்தீன் அவர்கள் காவல்துறையை அணுகும் முறை எனும் தலைப்பிலும்,
மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நிர்வாக தகவல்கள் மற்றும் ஒப்புதல் எனும் தலைப்பிலும்

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் மாவட்ட பெண்கள் கல்லூரி பற்றியும் அதற்க்கு கிளை நிர்வாகிகளின் ஒத்துழைப்பும் எனும் தலைப்பிலும்,
சகோதரர் *செங்கோட்டை பைசல்* (மாநில செயலாளர்) அவர்கள் *மீண்டு எழுவோம்* எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தியும்,
வருங்கால தாவா, சமுதாயப் பணிகளை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்களை வழங்கினார்கள்.
இந்த செயற்குழுவில் கிளை நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள கொள்கை சகோதரர்கள் கலந்து சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்












No comments:
Post a Comment