தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25/09/2020 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் யாசர் அரபாத், துணைச் செயலாளர்கள் சேக் பரீத், அப்துர்ரஷீத், ரபீக், சித்திக்,
மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ், மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்றது
கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும் இனி செய்யவேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக தகவல் பரிமாறப்பட்டது.
கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயற்குழு வில் பேசப்பட்ட
தகவல்கள் அடிப்படையில், கிளைகளின் விபரங்களை திரட்டி, முழுமையான நிர்வாகம் இல்லாத
கிளைகளில் நிர்வாக சீரமைப்புகள் செய்ய முடிவுகள்
செய்யப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் இயங்கும்
அல்கைராத் பெண்கள் கல்வியகத்தின் தேவைகளை பற்றி ஆலோசித்து, உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்ய குழுக்கள்
அமைக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:
Post a Comment