தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 27/02/2022 ஞாயிறு அன்று காலை 10:30 முதல் 1:00 மணிவரை திருப்பூர் மாவட்ட மர்கஸில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் பொருளாதார பராமரிப்பு பற்றி இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் கிளை நிர்வாகத்திற்கு வங்கி கணக்கு துவங்குதல் மற்றும் பராமரிப்பு பற்றி விளக்கம் வழங்கினார்கள்
மாவட்ட துணைசெயலாளர் நூர்தீன் அவர்கள் பில் புக், வவுச்சர் புக் பற்றியும், மாவட்ட தணிக்கை பற்றியும் விளக்கம்
வழங்கினார்கள்.
மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் கிளை சார்பில் தாவா மற்றும் சமுக சேவைப்பணிகளை செயல்படுத்த பொருளாதாரத்தை இலகுவாக திரட்டும் வழிமுறைகள் மற்றும் அதனை உரிய வகையில் செலவு செய்த தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பது பற்றி விளக்கம் வழங்கினார்கள்.
மாநில பொருளாளர் காஞ்சி இப்ராகிம் அவர்கள் தினசரி வரவு
செலவு புத்தகம் (டேபுக்) எழுதுவது பற்றியும், கணக்கு பராமரிப்பில் உள்ள
சந்தேகங்கள் பற்றியும் விளக்கம் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment