Wednesday, March 23, 2022

ஒருங்கிணைந்த கிளைகள் ஆலோசனைக் கூட்டம் - 2 _ கோம்பைத்தோட்டம் _ 23/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 23-03-2022 அன்று காலை 7 மணிமுதல் 8 மணி வரை மாவட்ட மர்கஸில்


மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்,

1) கோம்பை தோட்டம் கிளை

2) பெரியதோட்டம் கிளை

3) செரங்காடு கிளை

4) வெங்கடேஷ்வரா நகர் கிளை 

5) VSA நகர் கிளை

6) ஹவுசிங்யூனிட் கிளை

7) யாஸீன்பாபு நகர் கிளை

8) திருநகர் கிளை

9) பெரியகடை வீதி கிளை 


ஆகிய 9 கிளைகளை ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம்


மாவட்ட துணைச் செயலாளர் ஹனிபா, மாவட்ட துணைச் செயலாளர் ரபீக், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc.,  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

 


   இதில் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் கிளைகள் தோறும் வாய்ப்புள்ள இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிதண்ணீர், நீர்மோர் பொதுமக்களுக்கு வழங்க ஆலோசணை வழங்கப்பட்டது.

 

எதிர் வரும் ரமலான் மாத செயல்பாடுகளில் ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு பயண்படும் அரிசி மளிகை சாமான்கள் கொண்ட கிட் வழங்கி சமுதாயத்தில் ஏழை குடும்பங்களும்  ரமலான் மாதத்தில் மன மகிழ்வுடன் வாழ செயல்திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாக வைத்து செயல்படும் அமைப்பு என்பதையும்,

ஒருக்காலத்திலும் வன்முறைக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என்பதையும் கிளை நிர்வாகிகள் கவனத்தில் கொண்டு பொது மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என ஆலோசணை வழங்கி,

ஹிஜாப் தீர்ப்பு உள்ளிட்ட அநீதிக்கு எதிரான நமது  போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைத்து

உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல்உரிமைகளை வென்றெடுப்பதற்கு இறைவனின் உதவியுடன் இறைதூதரின் வழிகாட்டுதல்களை மீறாமல்போராடுவது, செயல்படுவது என்றும், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment