தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து
26/06/2022 அன்று மாபெரும் இரத்ததான முகாம்
திருப்பூர் பெரிய தோட்டம் கிளை மர்கசில் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அஜீஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா ,மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc., மற்றும் பெரியதோட்டம் கிளை நிர்வாகிகள் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது
இதில் ஏராளமான சகோதரர்கள் இளைஞர்கள் பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை எடுத்து காட்டும் வகையில் சமூக சேவையை செய்ய ஆர்வமுடன் இரத்ததான முகாமில் கலந்து 41 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
இந்த முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கியவர்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றிதல் மற்றும் கிளை சார்பில் இரத்த கொடையாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
சுயநலத்துடன் வாழும் மக்கள் மத்தியில் தொடர்ந்து இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவித்தவர்களாக
இந்த முகாமில் கலந்து சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரிய தோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

.jpeg)








.jpeg)
.jpeg)









No comments:
Post a Comment