Monday, January 06, 2020

மாநில செயற்குழு 5.12.2019





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு 5.12.2019 ஞாயிற்றுக்கிழமை
கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இதில் மாநில நிர்வாகிகள் உரை நிகழ்த்தினார்.









குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 25 ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் மாவட்ட ஆட்சியர் நோக்கி முஸ்லிம்கள் பேரணி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.








இதில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




அல்ஹம்துலில்லாஹ்

Saturday, January 04, 2020

நபிவழியில் ஜும்ஆ - அனுப்பர்பாளையம் கிளை




திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் கிளையின் சார்பாக 03/01/2020 அன்று நபிவழியில்  ஜும்ஆ தொழுகை  ஆரம்பம் செய்யப்பட்டது
 இதில்சகோ.ஷேக்பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, January 01, 2020

M.S.நகர் கிளை சந்திப்பு 01012020




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக, 01.01.2020 அன்று காலைM.S.நகர் கிளை சந்திப்பு  கிளை  மர்கஸில், கிளை பொறுப்பாளர் மாவட்ட   துணைச்செயலாளர் ரபீக் அவர்கள்  தலைமையில், மாவட்டதுணைத்தலைவர் யாசர் அரபாத் முன்னிலையில்    நடைபெற்றது.

இதில்  சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு கிளை சார்பில் செய்த பணிகள் பற்றியும்,  கிளையில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றியும் குறை நிறைகள் கேட்டறியப்பட்டு, ஆலோசனைகள் வழங்கி,

இனி செய்ய வேண்டிய தாவா பணிகள், நிர்வாகப் பணிகளைப் சிறப்பாக செய்வதற்க்கான  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், ஆர்வமுடன்  கருத்துக்களை பரிமாறி வருங்கால பணிகளை சிறப்பாக செயல்படுத்த முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

பெரியகடைவீதி கிளை நிர்வாக சந்திப்பு 31/12/2019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 31.12.2019 அன்று,   மாவட்ட மர்கஸில்   மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்   பெரியகடைவீதி கிளை  நிர்வாக சந்திப்பு   நடைபெற்றது.

பெரிய கடை வீதி மர்கஸ் இட உரிமையாளர் கொடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதால், உரிமையாளருக்கு நன்றி சொல்லி  மர்கஸில் நாம் ஏற்படுத்திய கட்டுமானங்களை திரும்ப எடுத்துக்கொள்வது என்றும்,

பெரியகடைவீதி மர்கஸ் கட்டுமானப் பொருள்களை  கணக்கம்பாளையம் தற்காலிக மர்கஸ் கட்டுமானத்திற்கு பயன்படுத்தவும்  முடிவு செய்யப்பட்டது,  எனும் மாவட்ட நிர்வாக ஆலோசனை முடிவுகளை சொல்லி, 


இனி வருங்கால செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.


இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெரிய கடை வீதி    கிளை   நிர்வாகிகள்   கலந்து   கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர நிர்வாககுழுக் கூட்டம் 31122019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 31/12/2019 அன்று இரவு 7:00 மணி முதல்,  நிர்வாககுழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.

டிசம்பர் 28 அன்று சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு திருப்பூர் மாவட்டம் சார்பில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டதையும், 


அதில் நிகழ்ந்த  குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.





பெரிய கடை வீதி மர்கஸ் இட உரிமையாளர் கொடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதால், உரிமையாளருக்கு நன்றி சொல்லி  மர்கஸில் நாம் ஏற்படுத்திய கட்டுமானங்களை திரும்ப எடுத்துக்கொள்வது என்றும்,

பெரியகடைவீதி மர்கஸ் கட்டுமானப் பொருள்களை  கணக்கம்பாளையம் தற்காலிக மர்கஸ் கட்டுமானத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

கிளைகளின் பணிகள் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை செய்து, கிளை சந்திப்புக்களை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரியில் இன்ஷாஅல்லாஹ் ஜனவரி 5ல்   நடக்கவுள்ள  மாநில செயற்குழுவில்   அணைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, December 29, 2019

கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி - திருப்பூர்



இந்தியர்களை மதரீதியாக பிரிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி யை அறிவித்து 28/12/2019 அன்று மிக பிரமாண்டமான இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன்  நடந்தது.
அல்ஹம்துலில்லாஹ்




இந்த கோரிக்கை பேரணியில் திருப்பூர் மாவட்டம் சார்பில்  பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர்  பெருந்திரளாக கலந்து கொண்டனர். 






























இந்த நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட நமது மாவட்ட கிளை மக்கள் விபரம்

மக்களுக்கு,  மாவட்ட நிர்வாகம் சார்பில் மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.

Thursday, December 26, 2019

மாவட்ட நிர்வாக குழுக் கூட்டம் 25122019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 25/12/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.




















மதரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும்
*குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி...*


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக *மாநிலம் தழுவிய அளவில்* இன்ஷாஅல்லாஹ் *டிசம்பர் 28* அன்று சென்னை *கவர்னர் மாளிகை நோக்கி பேரணி* நடத்தவுள்ளதற்காக

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்து பணிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.



மாவட்ட நிர்வாகம் சார்பில் பயண துஆ, பயண வழிகாட்டல், டோல் கடிதம், மருந்துகள், மதிய உணவு தயார் செய்து வழங்கவும், முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, December 24, 2019

ஆலோசனைகூட்டம் _ உடுமலை கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 24.12.19 அன்று, உடுமலை  கிளை   ஆலோசனைகூட்டம்   கிளை மர்கஸில், மாவட்ட  பொருளாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள்  தலைமையில்   நடைபெற்றது.





இதில் முஸ்லிம்களை அகதிகளாக்கும் அநியாய குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி இன்ஷாஅல்லாஹ் வரும் 28/12/2019 அன்று நடைபெறவுள்ள சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு செய்துள்ள பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள், மற்றும் கிளை சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து  கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.



உடனடியாக சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு சென்று இமாம்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேரணிக்கு  அழைப்பு கொடுக்கப்பட்டது. 
 
அல்ஹம்துலில்லாஹ்.

பெரிய தோட்டம் கிளை சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 23.12.19 அன்றுபெரிய தோட்டம் கிளை சந்திப்பு  கிளை  மர்கஸில்,கிளை பொறுப்பாளர்,    மாவட்ட   துணைச்செயலாளர் ஷேக் பரீத் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.

இதில் முஸ்லிம்களை அகதிகளாக்கும் அநியாய குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி இன்ஷாஅல்லாஹ் வரும் 28/12/2019 அன்று நடைபெறவுள்ள சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணிக்கு செய்துள்ள பணிகள் பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 கிளை நிர்வாகிகள், மற்றும் கிளை சகோதரரர்கள் ஆர்வமுடன்  கலந்து கருத்துக்களை பரிமாறி செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, December 23, 2019

மாவட்ட நிர்வாககுழுக் கூட்டம் 22122019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 22/12/2019 அன்று இரவு  மாவட்ட மர்கஸ் வளாகத்தில்   மாவட்ட  நிர்வாககுழுக் கூட்டம் மாவட்ட தலைவர். நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற  அவசர மாவட்ட செயல்வீரர்கள் கூட்ட நிகழ்வுகளும், பெரும்திரளாக கலந்துகொண்ட மக்களை இனி சரியாக வழிநடத்தி, சென்னை கவர்னர் மாளிகை பேரணியையும் திருப்பூர் மாவட்டம் சார்பில் சிறப்பாக செய்ய பல்வேறு முடிவுகளை ஆலோசனை செய்து எடுக்கப்பட்டது.

  

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர செயல்வீரர்கள் கூட்டம் 22122019




 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22/12/2019 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "சென்னை *கவர்னர் மாளிகை நோக்கி பேரணி* பற்றி அவசர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.





மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் இந்த கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள்.




மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் அவர்கள் "இறுதி வெற்றி கொள்கை உறுதிக்கே" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மாநில செயலாளர். *சகோ. தாவூத் கைசர்* அவர்கள்




பேரணியின் முக்கியத்துவம் மற்றும் நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்கள்.



நமது வாழ்வுரிமை பிரச்சனைக்காக, நமது சந்ததிகளின் எதிர்கால வாழ்வை பாதுகாக்க நடைபெறவுள்ள அந்த பேரணியில் நமது பகுதியில் எவ்வாறெல்லாம் பணி செய்து மக்களை திரட்டிச் செல்ல வேண்டும் எனும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி
கிளைகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றும் மக்களின் வருகையை கேட்டறிந்தார்கள்.

முதல் கட்டமாக 11 பஸ்களும், 35 வேன்களும் புக் செய்யப்போவதாக கிளை நிர்வாகிகள் வாக்களித்தனர்

சமுதாயத்திற்கான, போராட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் எனும் ஆலோசனை கூட்டத்திற்கே, நிர்வாகிகள் பேச்சாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள் என வளாகம் நிரம்பி வழியும் வகையில் பெருந்திரளாக
உத்வேகத்துடன் கலந்து கொண்டது



இந்தப் பேரணியின் ஆரம்ப வெற்றியாகவே அமைந்தது.

குடியுரிமை திருத்த சட்டம் நீக்கமே இறுதி வெற்றியாக அமையட்டும் எனும் பிரார்த்தனையுடன் களம் காண்போம் எனும் உறுதியுடன் செயல்வீரர்கள் கூட்டம் நிறைவுபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்...


Sunday, December 22, 2019

கவர்னர் மாளிகை நோக்கி பேரணி / நோட்டீஸ்





இந்தியர்களை மதரீதியாக பிரிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷாஅல்லாஹ் 28/12/2019 அன்று  சென்னை கவர்னர் மாளிகை நோக்கி பேரணி யை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் போஸ்டர்கள் 500 அடிக்கப்பட்டது.