Sunday, January 23, 2022

புத்தூர் சகோதரர்களுடன் தாவா சந்திப்பு - 23012022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தூர் பகுதி சகோதரர்களுடன் தாவா சந்திப்பு  23/01/2022 அன்று 

மாவட்ட தலைவர் சகோதரர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், மாவட்ட  செயலாளர் யாஸர்  அரபாத் முன்னிலையில் VKP கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

புத்தூர்  பகுதியில் வசிக்கும்  முஸ்லிம் மக்கள் சத்திய மார்க்கத்தை அறியாமலும், 
பல்வேறு அனாச்சாரங்களில் மூழ்கி வழிகேட்டில் செல்வதை தடுக்கும் வகையில், 

மார்க்க விழிப்புணர்வு தாவா பணிகளை செயல்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு

புத்தூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

சத்திய தவ்ஹீத் கொள்கை பிரச்சாரத்தை முன்னெடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் அவர்கள் விளக்கம் வழங்கினார்கள்.

அந்த சகோதரர்களும் தமது பகுதியில் சிறப்பான முறையில்  சத்திய பிரச்சாரத்தை கொண்டு செல்வோம் என ஆர்வமாக உறுதியளித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment