தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 23/01/2022 ஞாயிறு அன்று காலை 6:30 மணி முதல் திருப்பூர் படையப்பா நகர் சுற்று வட்டார கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மதுரபீக் , தலைமையில் திருப்பூர் படையப்பா நகர் மர்கஸில் நடைபெற்றது
இதில் படையப்பா நகர் சுற்று வட்டார
1) படையப்பா நகர்
2) குமரன் காலனி
3) S.V காலனி
4) M.S நகர்
ஆகிய கிளைகளின் நிர்வாகிகள், பேச்சாளர்கள், கலந்து கொண்டனர்.
சகோதரர் அன்சர். MISc., அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்" எனும் தலைப்பில் நிர்வாகிகள், பேச்சாளர்கள் தாவா பணிகளை மேம்படுத்த ஆலோசனைகளையும், தங்களின் நிர்வாக திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்கள்.
இறுதியில் தர்பியா நிகழ்விலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் வழங்கியோரை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment