Thursday, March 11, 2021

கிளை சந்திப்பு _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 11/03/21, அன்று மாவட்ட சந்திப்பு நடைபெற்றது.




இதில் மாவட்ட செயலாளர் ஜாகீர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் சித்தீக் கலந்துக் கொண்டு  பள்ளி இடத்திற்க்கான  வசூலை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, March 09, 2021

மதுரை மாவட்ட பேச்சாளர் சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்களை மாவட்ட நிர்வாகிகள் நலம் விசாரிப்பு

  நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்ட பேச்சாளர் சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்கள்


2/3/2021 செவ்வாய் மாலை மதுரை ஹாஜிமார் தெருவில்   அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். சமாதிகளிடம் கையேந்தக்கூடாது என்ற 

ஓரிறைக்கொள்கை ஏகத்துவ பிரச்சாரம் செய்யும்போது 

காட்டுமிராண்டிகள் சிலர் அவர்மீது  மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர்.

சத்தியத்தைச் சொன்னதற்காக இறைத்தூதர்களும் இதுபோல் எதிரிகளால் தாக்கப்பட்டுள்ளார்கள்

அன்று முதல் இன்று வரை சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொள்பவர்கள் மீது அசத்தியவாதிகள் காட்டுமிராண்டிகள் இதுபோல் இழிசெயல்களில் ஈடுபடவே செய்கின்றனர்.

மறுமைவெற்றியை நோக்கி செல்லும் சத்தியவாதிகளுக்கு இதுபோல இன்னல்கள் ஏற்படவே செய்யும் என்பதை உணர்ந்து,  

எத்தனையோ மக்கள் ஏதோதோ  பிரச்சனைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நிலையில் சத்தியத்தைச் சொன்னதற்காக தாக்கப்பட்டு வலியும் வேதனையும் அனுபவித்து சிகிச்சை பெறுவதும்,  

இதுபோன்ற பாக்கியத்தை சஹாபாக்கள் விரும்பி கேட்டதையும் நினைவு படுத்திப் பார்க்கும் போது சகோதரர்.செய்யது இப்ராஹிம் அவர்களுக்கு இறைவனின் அருள் என்றும் இதற்க்கான முழு கூலி மறுமையிலே பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளீர் என ஆறுதல் கூற 

அவரை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 08/03/2021 அன்று மதுரை அரசு மருத்துவமனையில்  நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தோம்.


அவர் விரைவாக நலம் பெற்று இன்னும் வீரியமாக சத்திய பிரச்சாரம் செய்ய அவருக்காக துஆ செய்தவர்களாக ஆறுதல் கூறி வந்தோம்.

 

அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட பேச்சாளர் சகோதரர்.பஷீர்அலி அவர்களை மாவட்ட நிர்வாகிகள் நலம் விசாரிப்பு

 நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பேச்சாளர் சகோதரர்.பஷீர்அலி அவர்களை



திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 08/03/2021 அன்று தென்காசியில் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தோம்.
தற்போது நல்ல நலமுடன் உள்ளார்
அல்ஹம்துலில்லாஹ்.

அவருக்காக பிரார்த்தித்த உதவிய அனைவருக்கும் துஆ செய்வதாக அவரும் அவரது குடும்பத்தினரும் நன்றி தெரிவித்தனர்.
ஜஸாக்கல்லாஹு ஹைரா..

Monday, March 08, 2021

உடுமலை கிளை தர்பியா

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரத்தின் சார்பாக 07-03-21 அன்று கிளை தர்பியா நடைபெற்றது



சகோ,முஹம்மது சலீம் misc அவர்கள் நபிகளாரை நேசிப்போம் என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்கள்


சகோ,யாஸர் அரஃபாத் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்!

இலவச புத்தக ஸ்டால் - சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-3-2021 அன்று

அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்)”   பிரச்சார   செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக நபி ஸல் அவர்களுடைய உன்னத வாழ்க்கை மற்றும் போதனைகளை பிறமத மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் *இலவச புத்தக ஸ்டால் சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய இரண்டு பகுதிகளில்* அமைக்கப்பட்டது.


இதில் அதிகமான பிறமத மக்கள் ஆர்வத்துடன் புத்தக ஸ்டாலுக்கு வருகை தந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை குறித்து விளக்கம் வழங்கி " *மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி (ஸல்) " என்ற தலைப்பில் புத்தகம் அன்பளிப்பாக* வழங்கப்பட்டது.

மேலும் பிறர்நலம் நாடுவது தான் இஸ்லாம், இஸ்லாமிய கடவுள் கொள்கை,
இஸ்லாம் ஓர் இயற்கை மார்க்கம் ஆகிய தலைப்புகளிலும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மொத்தம் மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி ( ஸல்) புத்தகம்* = 37 நபர்களுக்கும்
மற்ற தலைப்புகளில் 15 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

"யார் இந்த முஹம்மது நபி (ஸல்) இவரை அறிந்து கொள்வோம்" - வடுகன்காளிபாளையம் கிளை நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 7-3-2021 அன்று


பிறமத மக்கள் அதிகம் வசிக்கும் சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியில் "யார் இந்த முஹம்மது நபி (ஸல்), இவரை அறிந்து கொள்வோம் " என்ற தலைப்பில் நோட்டீஸ்

சோமனூர் காய்கறி சந்தை, கருமத்தம்பட்டி பஸ் நிலையம், அருகில் உள்ள கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட் என அனைத்து பகுதிகளிலும் உள்ள பிறமத சகோதரர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ இந்தியன் நகர் கிளை மதரசா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை* சார்பாக 07-03-2021 அன்று *பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு* நடைபெற்றது.




இதில் பிள்ளைகள் மீது பெற்றோர் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்ற தலைப்பில் சகோ. இர்பான் அவர்கள் உரையாற்றினார்


பெண்கள் மதரஸாவின் அடுத்த கட்ட செயல்பாடுகள்* என்ற தலைப்பில் *சகோதரி. பாஜிலா* அவர்கள் உரையாற்றினார்



இதில் மதரஸா மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.


*அல்ஹம்துலில்லாஹ்*

Sunday, March 07, 2021

இறை இல்லத்தில் ஓர் இரவு _ செரங்காடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் மர்கஸில் (06/03/21)-அன்று இரவு இறை இல்லத்தில் ஓர் இரவு என்ற தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடைபெற்ற நிகழ்ச்சிகள் :



1)09:40 - 10:10 மணி வரை சகோ.சேக் ஃபரீத் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுங்குமுறை என்ற தலைப்பில் உரையாற்றினார்

2) 10:15 - 11:15 வரை கேள்வி-பதில் நிகழ்ச்சி சகோ.அபுதாஹிர் நடத்தினார்.

3) 04:20 மணிக்கு தஹஜ்ஜத் தொழுகை நடைபெற்றது.

4)) 06:30 மணிக்கு - தொழுகை என்ற தலைப்பில் சகோ.அபுதாஹிர் தர்பியா நடத்தினார்.

5) தர்பியாவிற்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, March 06, 2021

4 கிளைகளின் ஒருங்கிணைந்த பொது ஆலோசனைக் கூட்டம் _VSAநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  05/03/2021 அன்று இஷா விற்கு பின்  வி.எஸ்.ஏ. நகர் கிளை மர்கஸில்  4 கிளைகளின்  ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்  



            மாவட்ட துணை செயலாளர் சேக் பரீத் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஹனீபா அவர்கள்  முன்னிலையில்    நடைபெற்றது.

 

இதில் வி.எஸ்.ஏ. நகர், செரங்காடு, ஹவுசிங் யூனிட், யாசின் பாபு நகர் ஆகிய 4 கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

 

VSA நகர் கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ்   14/03/2021அன்று நடத்தவுள்ள பெண்கள் தர்பியா நிகழ்ச்சி யின்  அவசியம் பற்றியும்மற்ற  கிளைகளின் பங்களிப்பு பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Wednesday, March 03, 2021

அவசர இரத்த தானம் _செரங்காடு கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 03-03-2021 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெறும் திருப்பூரை சேர்ந்த கர்ப்பிணி சகோதரி ராணி க்கு சகோ.சுல்தான் அவர்களால் B பாசிட்டீவ் இரத்தம் ஒரு யூனிட் அவசர இரத்ததானம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Monday, March 01, 2021

இலவச புக் ஸ்டால் _காலேஜ்ரோடு கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக இன்று(28/2/2021) ஞாயிற்றுக்கிழமை சாதிக்பாட்சா நகர் பகுதியில் இலவச புக் ஸ்டால் நிகழ்ச்சி நடைபெற்றது



அதில் முஹம்மதுரசூலுல்லாஹ் செயல்திட்டத்தின் முதல்கட்டமாக மனிதகுல முன்மாதிரி முஹம்மது நபி(ஸல்) உட்பட 35க்கும் மேற்பட்ட மார்க்கநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அவசர_இரத்ததானம் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-2-2021 அன்று திருப்பூரை சேர்ந்த கவிதா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சகோ.அனஸ் அவர்களால்



A நெகட்டீவ் ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, February 28, 2021

மனநிறைவை பெற்று தந்த மருத்துவமனை தாவா / VKP கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  28-2-2021 அன்று திருப்பூர் அரசு பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும்  நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு




திருப்பூர் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ.அப்பாஸ் மற்றும் சகோ.ஜாஹிர் அவர்கள் தலைமையில் வடுகன்காளிபாளையம் கிளை நிர்வாகிகள் நேரில்  சென்று

 

பிரசவ வார்டில் குழந்தைகளை ஈன்றெடுத்த மற்றும் குழந்தைகளை பெற இருக்கும் தாய்மார்களை சந்தித்து அவர்களை நலம் விசாரிக்கப்பட்டது.

 

மேலும் அவர்களுக்கு மனதைரியத்தை அதிகபடுத்தும் வகையில் சகோ.அப்துல்லாஹ் (MISC)  அவர்கள் பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்கள்.

 

குழந்தைகளுடைய ஆரோக்கியத்திற்கு தேவையான  தாய்ப்பாலின் அவசியம் மற்றும் தாய்மார்கள் பேண வேண்டிய  மனநிலை சார்ந்த விஷயங்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

 

 

பிறர் நலம் நாடுவது தான் இஸ்லாம் என்ற நபிகளாருடைய பொன்மொழிக்கு ஏற்றவாறு நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்யப்பட்டு வரும் பல்வேறு மனிதநேய பணிகள் குறித்து விளக்கப்பட்டு


 

மருத்துவமனையில் தங்கி பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் அனைத்து பெண்களுக்கும்  பிரட்பிஸ்கட் ,நேந்திர வாழைப்பழம் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 

இதில் திருப்பூர் மாவட்ட மருத்துவரணிக்கான (இரத்த தான தேவைக்கு மற்றும் ஆம்புலன்ஸ் தேவைக்கான தொடர்பு எண்கள் அடங்கிய) விசிடிங் கார்டுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

 

சிகிச்சை பெற்றுவரும் அனைத்து பெண்களும் மற்றும் செவிலியர்களும்  மனமகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

 

 

அல்லாஹ்வின்_தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் திரும்பி வரும் வரை  சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டே யிருக்கிறார்                                      ஸஹீஹ் முஸ்லிம் : 45

 

 

எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

 


செரங்காடு கிளை மதரஸாநிகழ்ச்சி & தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 28/02/21 அன்று மாலை 05:00 மணி முதல் 06:30 வரை மதரஸா மாணவர்களின் கண்காட்சி நிகழ்ச்சியும்  அதைத் தொடர்ந்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

 



அதில் மதரஸா மாணவர்களின் கிராத் மற்றும் துஆ மனனம் நடைபெற்றது.


 

சகோ.அபூபக்கர் சித்திக் ஆதி அவர்கள் HERO OF HEROES என்ற தலைப்பிலும்,

சகோ.சுஜா அலி MISC யார் இவர்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

 

இறுதியில் மதரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும்  நடைபெற்றது.


 

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்

 

MS நகர் கிளை பொதுக்குழு கூட்டம்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர்  கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்  ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்  தலைமையில்,

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணை செயலாளர் சித்தீக் அவர்கள்  அவர்கள் முன்னிலையில்  28/02/2021 அன்று கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

இதில் முதலாவதாக மாவட்ட துணைத்தலைவர் சகோ.யாஸர் அவர்கள் "பொறுப்புகளினால் நாம் பெறும் நன்மைகள் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்

 

அதை தொடர்ந்து  கிளையின் செயல்பாட்டு அறிக்கை  மேலும் வரவு செலவு அறிக்கை ஒப்படைக்கப்பட்டது

 

அதை தொடர்ந்து  கீழ்க்கண்ட   புதிய நிர்வாகம்  தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

 தலைவர் : சாதிக்பாட்சா  9566784878  

செயலாளர்:  காதர் 9688049988

பொருளாளர்: ஜாகிர்  உசேன் : 9790288240 

துணை தலைவர்:  அனஸ்: 9789291524

 துணை செயலாளர்: மக்கீம் 8903712148

ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

தொடர்ந்து வருங்கால தாவா பணிகளை வீரியமாக செய்ய ஆர்வமூட்டப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்