தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் (3)
22-10-2021 அன்று மாவட்ட தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.
1) மாவட்ட நிர்வாகிகள் கிளைகளை சந்தித்ததில் கிளைகளின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
2) சென்ற வார மசூராவில் எடுக்கப்பட்ட முடிவுகளின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது.
3) கிளைகளில் பொதுக்குழு நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
4) நடுநிலை சமுதாயம் வார இதழ் சம்பந்தமாக மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் மாவட்ட மர்கஸில் ப்ளெக்ஸ் தயார் செய்து வைப்பது.
5) அல்கைராத் பெண்கள் கல்லூரி சம்பந்தமாக நகர பகுதியில் உள்ள கிளைகள் மக்களுக்கு அழைப்பு கொடுக்கும் வகையில் ப்ளெக்ஸ் மற்றும் நோட்டீஸ் தயார் செய்து வழங்குவது என்றும்
6) திருப்பூர் மாவட்டம் சார்பாக மக்தப் மதரஸாக்களை மேம்படுத்துவதற்காக மாவட்ட மதரஸா பொறுப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழுவின் பணிகள் குறித்து பேசப்பட்டு விரைவாக அவர்களை ஒருங்கிணைப்பு செய்து பணிகளை மேற்கொள்வதெனவும்
7) மருத்துவரணி சார்ந்த பணிகளை வீரியப்படுத்த மாவட்ட மருத்துவரணி தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவின் பணிகள் குறித்து பேசப்பட்டு விரைவாக அவர்களை ஒருங்கிணைப்பு செய்து பணிகளை மேற்கொள்வதெனவும்
மாவட்ட மாணவரணி பொறுப்பாளராக சகோ.பாதுஷா அவர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநில தலைமையின் ஒப்புதல் பெற மெயில் அனுப்புவது என்றும்
9) மாணவரணி பொறுப்பாளர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பது அவர்களுக்கான பணிகள் குறித்து பேசப்பட்டு விரைவாக அவர்களை ஒருங்கிணைப்பு செய்து பணிகளை மேற்கொள்வதெனவும்
10) மாணவரணி பணிகளில் முதற்கட்டமாக கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கும் முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
11) மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு மற்றும் அல்கைராத் மதரஸாவிற்கான பொருளாதார பற்றாக்குறை சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு சந்தா நன்கொடைகளை அதிகப்படுத்த முயற்சி செய்வதெனவும்
12) கிளைகளில் இமாம் நியமனம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது
ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment