Friday, August 12, 2022

மாணவரணி- 3வது மண்டல கிளைகள் சந்திப்பு _11082022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 11/08/2022 வியாழக்கிழமை அன்று இரவு 8:30 மணிக்கு  மாவட்ட  மர்கஸில் வைத்து

தாவா பணிகள் மற்றும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்தும் வகையில் 3வது மண்டல வாரியாக கிளைகள் சந்திப்பு நடைபெற்றது.




இதில் மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "பித்அத் ஒழிப்பு மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப் படுத்துவோம்" என்ற தலைப்பில் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.



அதை தொடர்ந்து மாவட்ட தலைவர்  சகோ.சிக்கந்தர் அவர்கள் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


அல்ஹம்துலில்லாஹ்

Monday, August 08, 2022

பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு மாணவரணி மண்டல வாரியாக கிளைகள் சந்திப்பு - 2

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 07/08/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு மங்கலம் கிளை மர்கஸில் வைத்து

தாவா பணிகள் மற்றும் மாணவரணி பணிகளை வீரியப்படுத்தும் வகையில் மண்டல வாரியாக கிளைகள் சந்திப்பு நடைபெற்றது.



இதில் மாவட்ட செயலாளர் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "பித்அத் ஒழிப்பு மாநாட்டிற்கான தாவா பணிகளை வீரியப் படுத்துவோம்" என்ற தலைப்பில் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.



அதை தொடர்ந்து மாவட்ட தலைவர்  சகோ.சிக்கந்தர் அவர்கள் மாணவரணி பணிகளை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


அல்ஹம்துலில்லாஹ்

Friday, August 05, 2022

காலேஜ்ரோடு கிளை பொதுக்குழு _ 04/08/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக  காலேஜ்ரோடு கிளை நிர்வாக சீரமைப்பு பொதுக்குழு மாவட்ட துணை தலைவர்  சகோ. ஜாகிர் அப்பாஸ்  தலைமையில் கிளை மர்கஸில் 04-08-2022  அன்று நடைபெற்றது.



தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  புதிய நிர்வாகம் 

நிர்வாகிகள் விபரம்:


தலைவர்:  அப்துல்ஸலாம் 6374389520

செயலாளர்: உசேன் 9698484343

பொருளாளர்:  ஹஸன்  9894167213

துணைத் தலைவர் :   ரபீக்ராஜா  9944640570

துணைச் செயலாளர் :   அஷ்ரப் 8807898197

 

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Friday, July 15, 2022

செரங்காடு கிளை பொதுக்குழு 14/07/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமையில் மாவட்ட துணைசெயலாளர் ரபீக் முன்னிலையில் 14/07/2022 அன்று கிளை மர்கசில் நடைபெற்றது

கிளையின் செயல்பட்டு அறிக்கை, வரவு செலவு விபரம் தாக்கல் செய்து கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது 


தலைவர்: நூருல் ஹுதா  9994666979

செயலாளர்: ஜெய்லாபுதீன் 9600076591

பொருளாளர்: சுல்தான் 7092440650

துணைத்தலைவர்: தாஜ்தீன் 9994428175

துணைச்செயலாளர்: ரஃபீக்  9842396498


 அல்ஹம்துலில்லாஹ்

  


Thursday, June 30, 2022

திருப்பூர் மாவட்ட 36வது புதிய கிளை “காதர் பேட்டை கிளை” _29062022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காதர் பேட்டை கிளை   29/06/2022 புதன் கிழமை மாலை திருப்பூர் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. 


இதில்   திருப்பூர் மாவட்ட 36வது புதிய கிளை  “காதர் பேட்டை கிளை” துவங்கப்பட்டது.

 


இதில் சகோ.அப்துல் ரஹ்மான் -  9865149810

 

சகோ.முபாரக் அலி - 9994541684

 

சகோ.அஷ்ரப் கான் - 85266 33441

 

ஆகியோர் காதர்பேட்டை கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...

 

தேர்வு செய்யப்பட புதிய நிர்வாக குழுவிற்கு வருங்கால தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்

 

Sunday, June 26, 2022

இரத்ததான முகாம் _ பெரிய தோட்டம் கிளை _26062022

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை மற்றும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து


26/06/2022 அன்று மாபெரும் இரத்ததான முகாம்
திருப்பூர் பெரிய தோட்டம் கிளை மர்கசில் நடைபெற்றது.



இந்த இரத்ததான முகாம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அஜீஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா ,மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc., மற்றும் பெரியதோட்டம் கிளை நிர்வாகிகள் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றது


இதில் ஏராளமான சகோதரர்கள் இளைஞர்கள் பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் என்பதை எடுத்து காட்டும் வகையில் சமூக சேவையை செய்ய ஆர்வமுடன் இரத்ததான முகாமில் கலந்து 41 யூனிட் இரத்ததானம் செய்தனர்.














இந்த முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கியவர்களுக்கு தமிழக அரசின் பாராட்டு சான்றிதல் மற்றும் கிளை சார்பில் இரத்த கொடையாளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.










சுயநலத்துடன் வாழும் மக்கள் மத்தியில் தொடர்ந்து இதுபோன்ற சமூக சேவையில் ஈடுபட வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி தெரிவித்தவர்களாக






இந்த முகாமில் கலந்து சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்களுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரிய தோட்டம் கிளை நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு _26062022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 26-6-2022 அன்று பல்லடம் கிளை நிர்வாக சீரமைப்பு மாவட்ட  தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில்  பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது.





இதில் பல்லடம் கிளை சார்பில் கோரிக்கைகள் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு   காலியாக இருந்த பொறுப்புகளுக்கு  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் 



பல்லடம் நகர கிளை முழு நிர்வாகம் விபரம் :-


தலைவர் : A.மீரான் 9791467593


செயலாளர் : சாகுல் ஹமீது 9944849965 


பொருளாளர் : உமர் பாரூக் 7904909 255


துணைத்தலைவர்: சிராஜ் தீன் 9843896811


துணை செயலாளர் : அக்பர்அலி  9442614814


துணை செயலாளர் :  நூர்தீன் 9715005655

 

மாணவரணி : சாதிக்உசேன் - 9344864573


மருத்துவரணி -அப்துல் காதர் 9486417727


தொண்டரணி - சவுக்கத் அலி :9944473998


 மேலும் கிளை சார்பாக நடைபெற்று வரும் தாவா மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கிளை உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தப்பட்டது.


அடுத்தகட்ட தாவா மற்றும் சமுதாயப் பணிகள் சம்பந்தமாக கிளை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான பேச்சுப் பயிற்சி _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 26-06-2022 அன்று ஆண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து ஐந்தாவது வாரமாக மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.

இதில் சகோ.அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் பயிற்சி வழங்கினார்.

இந்த பயிற்சி வகுப்பில் ஆண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்

காமராஜ் நகர் கிளை சந்திப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 26-6-2022 அன்று காமராஜ் நகர் கிளை சந்திப்பு மாவட்ட  தலைவர் சகோ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில்   காமராஜ் நகர் கிளை மர்கஸில் நடைபெற்றது.



இதில் கிளை சார்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


காமராஜ் நகர் கிளை சார்பாக நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவை மேம்படுத்தும் வகையில் மதரஸா பெற்றோர் சந்திப்பு நடத்துவது மதரஸா யூனிபார்ம் மக்கானா, ID CARD, மதரஸா பேக் கிளை சார்பாக ஏற்பாடு செய்து தருவது சம்பந்தமாகவும்


பெண்கள் பயான் வாரந்தோறும் 2 வீடுகளில் கிளையில் ஏற்பாடு செய்வது சம்பந்தமாகவும்


ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்துவது சம்பந்தமாகவும்


 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்குதல், இரத்த வகை கண்டறியும் முகாம், ரேசன் கார்டு திருத்த முகாம், இலவச டியூசன் வகுப்புகள் சம்பந்தமான பணிகள் குறித்தும்  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


மாவட்டத்திற்கான கிளையின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

Friday, June 17, 2022

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16/06/2022

 



நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சங்க பரிவார பாஜகவையும் அதற்கு போராடிய மக்களின் வீடுகளை இடித்த உபி அரசாங்கத்தையும் போராடியவர்களை சுட்டு கொன்ற ஜார்கண்ட் அரசாங்கங்களைக் கண்டித்தும் 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக,  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 16/06/2022 அன்று  திருப்பூர் மாநகராட்சி எதிரில்  நடைபெற்றது

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார்,  ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சியோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் சகோ E.பாரூக் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்,

அதில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமீபத்தில் பேசிய பாஜகவின் தேசிய தொடபாளர் நுபுர் ஷர்மா மற்றும் பாஜக ஊடகப்பொறுப்பாளர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரின் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  வன்மையாக கண்டிக்கிறது. என்றும்

 

 200 கோடிக்கும் மேலான இஸ்லாமிய மக்களால் தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கப்படக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை குறித்து உண்மைக்கு மாற்றமான செய்திகளை பொது வெளியில் பேசியிருக்கின்றனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. என்றும்

 

     எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமாக உபி அரசின் புல்டோசர் இடிப்புகள் உள்ளன, எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் போராடுபவர்கள் முஸ்லீம் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களின் வீடுகள் இடிக்கப்படுகிறது,  இடிப்போம் என்று வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் மிரட்டும் வகையில் அமைச்சர்களும் அதிகாரிகளும், அரசின் ஆலோசகர்களும் நடந்து கொள்கின்றனர்  , ஜார்கண்ட் அரசோ போராடிய இரண்டு இளைஞர்களைச் சுட்டு கொன்றுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்றும் இன அழிப்பிற்கான முன்னேற்பாடு இவை என சர்வதேச நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன என்று கூறினார்

 

இந்தியாவின் பொருளாதாரமும், விலைவாசியும் படு மோசமான நிலையில் இருக்கும் இச்சூழலில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் மதவெறிப்பிரச்சாரத்தை தான் இந்த ஒன்றிய அரசு முன்னெடுக்கிறது. என கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

 

விண்ணைப் பிளக்கும் கோஷங்களோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட துணை செயலாளர் ஹனீபா  அவர்களின் நன்றியுரைக்குப்பிறகு அமைதியாக கலைந்து சென்றனர்.


அல்ஹம்துலில்லாஹ் 


பத்திரிகை செய்திகள் 




இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை - மத்திய அரசு பதவி விலக வேண்டும் - திருப்பூரில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்






Sunday, April 24, 2022

காமராஜ் நகர் கிளை சந்திப்பு _ 24/04/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/04/2022 அன்று மாலை 1:30 மணிக்கு காமராஜ் நகர்  கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்  நடைபெற்றது.

 

காமராஜ் நகர்  கிளை நிர்வாகம் சார்பில் செயல்படுத்திய  பணிகள் பற்றி கேட்டறிந்து,  

 

 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கிளையின் கோரிக்கைகள்  பற்றியும் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள்  வழங்கப்பட்டது.

 

அதில் தனிநபர் தாவா, மக்தப் மதரசா ஆரம்பம் செய்வது, ரமலான் பித்ரா, பெருநாள் தொழுகை, மற்றும் சமுதாய சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த   பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  

அல்ஹம்துலில்லாஹ்

அறிவொளி நகர் கிளை சந்திப்பு -24/04/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/04/2022 அன்று மாலை 4:00 மணிக்கு அறிவொளி நகர்  கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் காஜா பாய் முன்னிலையில்  நடைபெற்றது.

 

அறிவொளி நகர்  கிளை நிர்வாகம் சார்பில் செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து,   அவர்களை ஊக்கப்படுத்தி,

 

 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கிளையின் கோரிக்கைகள்  பற்றியும் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அதில் ரமலான் பித்ரா, பெருநாள் தொழுகை ஏற்பாடுகள், கிளை மர்கஸ் கட்டுமான பணிகள், மற்றும் சமுதாய சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த   பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  

அல்ஹம்துலில்லாஹ்

 

பல்லடம் கிளை சந்திப்பு _ 24/04/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 24/04/2022 அன்று காலை 5:40 மணிக்கு பல்லடம் கிளை சந்திப்பு மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் பல்லடம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 

பல்லடம் கிளை நிர்வாகம் சார்பில் செயல்படுத்திய பல்வேறு பணிகள் பற்றி கேட்டறிந்து,   அவர்களை ஊக்கப்படுத்தி,



 இனி வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் கிளையின் கோரிக்கைகள்  பற்றியும் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

அதில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை சம்பந்தமாக‌ கிளையில் முகாம் நடத்துவது, ரமலான் பித்ரா, பெருநாள் தொழுகை ஏற்பாடுகள், கிளை மர்கஸ் கட்டுமான பணிகள், பற்றி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

 

அல்ஹம்துலில்லாஹ்