Tuesday, December 29, 2020

பொது ஆலோசனைக் கூட்டம் - VKP

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக  28/12/2020 அன்று இஷா விற்கு பின்  VKP கிளை மர்கஸில்  மங்கலம் பகுதி ஐந்து கிளைகளின்   ஒருங்கிணைந்த  பொது ஆலோசனைக் கூட்டம்  




             மாவட்ட  செயலாளர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்  மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத்,  மாவட்ட துணை செயலாளர் ரபீக் ஆகியோர் முன்னிலையில்    நடைபெற்றது.


இதில் வடுகன்காளிபாளையம், மங்கலம், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், R.Pநகர் ஆகிய கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.


VKP கிளை சார்பில் இன்ஷாஅல்லாஹ் 10/01/2021அன்று நடத்தவுள்ள இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி யின்  அவசியம் பற்றியும்



மங்கலம் பகுதி கிளைகளின் பங்களிப்பு பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


கலந்து கொண்ட கிளை சகோதரர்கள் இனிய மார்க்கம் நிகழ்ச்சி  பெரும் வெற்றி அடையும் வகையில்,   உத்வேகமாக பணிகளை செய்து

மங்கலம் பகுதியில் சமூக நல்லிணக்கம் உருவாகும் வகையில் பணிகளை அமைத்து, பொதுமக்களின் நன்மதிப்பை பெரும் வகையில் பிறமத மக்களை திரட்ட  உறுதி வழங்கினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்

 

Monday, December 28, 2020

குடும்பவியல் தர்பியா - சின்னவர்தோட்டம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *சின்னவர்தோட்டம் கிளை சார்பில்  இலக்கை நோக்கி இளைஞனே வா செயல்திட்டத்தை  முன்னிட்டு   27/12/20 இன்று  குடும்பவியல் தர்பியா  நடைபெற்றது 



இதில் முதலாவதாக சகோ யாசர் அராபத் அவர்கள் ஆதரிக்கும் பிள்ளைகள் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 

இரண்டாவதாக சகோ தவ்பிக்  அவர்கள் அரவனைக்கும் பெற்றோர்கள் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்


மூன்றாவதாக சகோ MI சுலைமான் அவர்கள் குடும்பமாக தாவா செய்வோம்  என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்

நான்காவதாக சகோ அபூபக்கர் சித்தீக் அவர்கள் அன்பு மனைவி அருமை கணவர் என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்

ஐந்தாவதாக சகோ இர்பான் அவர்கள் இலக்கை நோக்கி இளைஞனே வா  என்கிற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் 

500 மேற்பட்ட சகோதர சகோதிரிகள் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது .

அல்ஹம்துலில்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

இலக்கு - குறும் படம் -கோம்பைத் தோட்டம் பரிசளிப்பு

 


இலக்கு இளைஞர்கள், பெற்றோருக்கான விழிப்புணர்வு குறும் படம் 

 கோம்பைத் தோட்டம்  கிளை மதரசா மாணவர்களின் குறும்படம் 


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 27/12/20 அன்று நடைபெற்ற மதரஸா நிகழ்ச்சியில் இலக்கு குறும்படம் வெளியிடப்பட்டு, 

அதன்  உருவாக்கத்தில் பங்கேற்ற சகோதரர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது 







  அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூரில் வேளான் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட TV & பத்திரிகை செய்திகள்


மக்கள் விரோத மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான புதிய *வேளாண் சட்டம் 2020 ஐ கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 25/12/2020 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி திருப்பூர் *மங்கலம் நால்ரோடு* பகுதியில் நடைபெற்றது.

*கண்டன உரை* மாநிலச் செயலாளர் சகோதரர் *செங்கோட்டை பைசல்* அவர்கள்
ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விவசாய திருத்த சட்டம் 2020 ஐ திரும்பப்பெறு எனும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இலக்கை நோக்கி இளைஞனே வா! _ S.V. காலனி கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 27/12/2020 அன்று மாலை 5:30முதல் 9:30 வரை 

இலக்கை நோக்கி இளைஞனே வா! 

எனும் தலைப்பில்  தர்பியா நிகழ்ச்சி 
திருப்பூர் S.V. காலனி JJ மகாலில் நடைபெற்றது  


இதில் மாவட்ட துணைசெயலாளர் சகோதரர். சித்தீக் அவர்கள் தலைமையில்

ஆரம்பமாக மதரசா மாணவ மாணவிகளின் பயான் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.




தொடர்ந்து சகோதரர். இம்ரான் அவர்கள் பெற்றோர்களின் பொறுப்பு எனும் தலைப்பிலும்,

சகோதரர். அப்துல் சமது M.I.Sc., அவர்கள்   இன்றைய   இளைஞர்கள், இளம்பெண்களின் நிலை எனும் தலைப்பிலும்  உரை நிகழ்த்தி நல்லொழுக்க பயிற்சி வழங்கினார்கள்.

தொடர்ந்து மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு  பரிசுகள் வழங்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்


அவசர இரத்ததானம்- திருப்பூர் மாவட்டம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 25/12/2020  அன்று திருப்பூர் பகுதி சார்ந்த   சகோதரியின் அவர்களுக்கு அவசர சிகிச்சைக்காக   அரசு மருத்துவமனையில் B+tve  ஒரு யூனிட் இரத்தம் 


சகோதரர்  விஜய் அவர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.