தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 31/12/2021 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் செய்து,
மாவட்டத்தில் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இன்ஷாஅல்லாஹ் வரும் 7/1/2022 அன்று நடைபெறவுள்ள மாவட்ட செயற்குழு பற்றி ஆலோசித்து நிகழ்ச்சிநிரல் மற்றும் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்
கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, அவசியமுள்ள கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.