Saturday, February 12, 2022

ஹிஜாப் _கண்டன ஆர்ப்பாட்டம் பத்திரிகை செய்திகள்

 கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பற்றிய பத்திரிகை செய்திகள்


தினத்தந்தி







தினமணி




தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம் - https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2022/feb/12/தவ்ஹீத்-ஜமாஅத்-ஆா்ப்பாட்டம்-3790807.html


தமிழ் இந்து நாளிதழ்



மதிமுகம் TV





public video news

மாநகராட்சி அலுவலகம் எதிரே கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் https://link.public.app/2eJC



simplicity video chanel

ஹிஜாப் சர்ச்சை: திருப்பூரில் தவ்ஹித் ஜமாஅத் கண்டனம். பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். https://simplicity.in/coimbatore/tamil/theatre/3555/Karnataka-Hijab-row-Tamil-Nadu-Thowheed-Jamath-protest-in-Tiruppur-against-BJP-Govt


நியூஸ் எக்ஸ்பிரஸ்

 



NEWS 14 TAMILNADU

https://www.youtube.com/watch?v=qkDe6wAEjBY&feature=youtu.be

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு வகுப்புகளுக்கு

https://youtu.be/qkDe6wAEjBY

மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் (16) 11/02/2022

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு கூட்டம் 11/02/2022 அன்று இரவு 7:00 மணி முதல் 8:30 மாவட்ட மர்கசில்  மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

 



இதில் 11/02/2022 அன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து முடிந்த  ஹிஜாப் உரிமை கண்டன ஆர்ப்பாட்ட  செயல்பாடுகள் பற்றியும், குறை நிறைகள் பேசப்பட்டது.


 

இந்த ஆர்ப்பாட்டம் இதுவரை திருப்பூர் மாநகர் காணாத வகையில் பிரமாண்டமாக மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றதிற்காக உழைத்த அணைத்து  கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், தாயீக்கள், பெண்கள் தாஃவா குழுவினர் மற்றும் பொருளாதாரத்தை தந்து உதவிய சகோதர சகோதரிகள் என  அனைவருக்கும் நன்றி அறிவிப்பு செய்யவது என்றும்,

 

ஆர்ப்பாட்டக் களத்தில் மிகச் சிறப்பான முறையில் களப்பணியாற்றி மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்த அனைத்து தொண்டரணி சகோதரர்களுக்கும், தொண்டரணி சகோதரிகளுக்கும் நன்றி அறிவிப்பு செய்வது என்றும்

 

 

கிளைகளின் நிர்வாக சீரமைப்புக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு,   அவசியமுள்ள  கிளைகளுக்கு பொதுக்குழு நடத்த மாவட்ட பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

 

 

கிளைகளின் தாவா சமுதாய சேவைப்பணிகளை வீரியப்படுத்த, மாவட்ட நிர்வாகிகளின் கிளை பொறுப்புகள் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டது.

 

யாஸர் அரபாத்  (மாவட்ட செயலாளர் )

 

கோம்பைதோட்டம் கிளை

பெரியதோட்டம் கிளை

படையப்பா நகர் கிளை

 

ஜாகிர் அப்பாஸ்  (துணைத்தலைவர்)

 

மங்கலம் கிளை

சின்னவர் தோட்டம் கிளை

இந்தியன் நகர் கிளை

R.P நகர் கிளை

வடுகன்காளிபாளையம் கிளை

 

காஜா பாய்  (துணைச் செயலாளர்)

 

உடுமலை கிளை

சாதிக் நகர் கிளை

காலேஜ் ரோடு கிளை

GK கார்டன் கிளை

 

அப்துல் ரசீது (துணைச் செயலாளர்)


பல்லடம் கிளை

காங்கேயம் கிளை

மடத்துகுளம் கிளை

ஆண்டியக்கவுண்டனூர் கிளை

 

 

ரபீக் (துணைச் செயலாளர்)

 

வெங்கடேஷ்வரா நகர் கிளை

செரங்காடு கிளை

தாராபுரம் கிளை

அலங்கியம் கிளை

 

அப்துல்லா (வர்த்தகரணி செயலாளர் )

 

SV காலணி கிளை

MS நகர் கிளை

ஹவுசிங்யூனிட் கிளை

 

தன்வீர் (மாணவரணி  செயலாளர்)

 

யாஸீன்பாபு நகர் கிளை

திருநகர் கிளை

VSA நகர் கிளை

அவினாசி கிளை

 

சுலைமான் (தொண்டரணி செயலாளர்)

 

அனுப்பர்பாளையம் கிளை

குமரன் காலனி கிளை

ஆத்துபாளையம் கிளை

 


அடுத்து மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஒருமாதம் ஹிஜாப் சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யலாம் என்றும் முடிவுகள் ஆலோசித்து எடுக்கப்பட்டது

 

அல்ஹம்துலில்லாஹ்.

 

ஹிஜாப்_ கண்டன ஆர்ப்பாட்டம் - திருப்பூர் 11/02/2022


கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 2022 பிப்ரவரி 11 வெள்ளிக் கிழமை மாலை 4:30 மணி முதல் 6:15மணி வரை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு

மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலாளர் சகோதரர் மங்கலம் நூர்தீன் அவர்கள்

கண்டன முழக்கத்துடன் ஆரம்பமான ஆர்பாட்டத்தில்,



சகோதரி ஆலிமா. அர்ஷிதா (மேலப்பாளைம் அல்இர்ஷாத் பெண்கள் இஸ்லாமிய கல்வியக முன்னாள் ஆசிரியை) அவர்கள்


ஹிஜாப் பெண்களின் உரிமைப் பாதுகாப்பு என்று உரை நிகழ்த்தி இந்த ஹிஜாப் எனும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய பாதுகாப்பு உரிமையை இழக்க விட மாட்டோம்,. உறுதியடன் போராடியாவது மீட்டெடுப்போம் என தெளிவாக பதிவு செய்தார்.


தொடர்ந்து கண்டன முழக்கங்களை மாவட்ட பேச்சாளர்கள் அன்சர் MISc., VSA நகர் இம்ரான் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் அவர்கள் உணர்வு பூர்வமாக பதிவு செய்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் அவர்கள்


நமது உரிமைக் காண போராட்டத்தின் மூலம் ஆளும் ஆட்சியாளர்களின் செவிகளுக்கும், தொடர் மதவெறி போக்கை கைய்யாளும் காவி சங்பரிவாரத்தின் சூழ்ச்சிகளுக்கும் எதிராகவும் அழுத்தமாக #அல்லாஹுஅக்பர் எனும் முழக்கம் மூலம் கலந்துகொண்ட பல்லாயிரக் கணக்கானோரின் உணர்வுகளை திருப்பூர் மட்டுமல்லாது உலகமே கவனிக்கும் வகையில் சரியாக பதிவு செய்தார்.


மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் அவர்கள் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் உடுமலை அப்துல் ரஷீத், பல்லடம் காஜா பாய், கோம்பைத்தோட்டம் GOLD ஹனீபா, பெரியதோட்டம் ரபீக், மாவட்ட தொண்டரணி செயலாளர் உடுமலை சுலைமான் சேட் உள்பட


பெருவாரியான மாணவியர், மகளிர், குழந்தைகள், ஆண்கள் என பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு எழுச்சியுடன் தங்கள் கண்டங்களை பதிவு செய்து ,

இந்த ஹிஜாப் உரிமைப் பறிப்பை மீட்போம் என்றும், வருங்காலத்தில் இது போன்ற உரிமை பறிப்புகள் யாருக்கும் எங்கும் நடக்க விட மாட்டோம் எனும் சூளுரையுடன்


மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் MISc.,அவர்களின் நன்றி உரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்



நன்றி அறிவிப்பு! - ஹிஜாப் - கண்டன ஆர்ப்பாட்டம்

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.


நன்றி அறிவிப்பு!




கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடைசெய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் பாசிச பாஜக அரசை

கண்டித்தும் திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 


இறைவனின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ் 



ஆர்ப்பாட்டம் அறிவித்த குறுகிய நாட்களிலேயே கிளை நிர்வாகம் ஆர்ப்பாட்ட அறிவிப்புகளை பல்வேறு வகையில் பொதுமக்களிடம் சேர்க்கும் முகமாக களப்பணியாற்றியுள்ளீர்கள்.


அல்லாஹ்வின் மாபெரும் அருளால், ஆர்ப்பாட்டக்களத்தில் பல்லாயிரக்கணக்காண ஆண்களும்  பெண்களும் குழந்தைகள் என அனைவரும் பங்கேற்று அநீதிக்கெதிராய் ஆர்ப்பரித்து தங்களது கண்டனங்களை கோஷங்களாக முழக்கமிட்டனர்.



அநீதிக்கெதிரான இந்த ஆர்ப்பாட்ட களத்திற்கு அனைத்து வகையிலும் அர்ப்பணிப்பு செய்த கிளை நிர்வாகிகள்,  உறுப்பினர்கள், தாயீக்கள், பெண்கள் தாஃவா குழுவினர் மற்றும் பொருளாதாரத்தை தந்து உதவிய சகோதரர்களுக்கும் என  அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! 


நமது உரிமைக்காண போராட்டத்தின் மூலம் ஆளும் ஆட்சியாளர்களின் செவிகளுக்கும்,  தொடர் மதவெறி போக்கை கைய்யாளும் காவி சங்பரிவாரத்தின் சூழ்ச்சிகளுக்கும் எதிராகவும் படைத்த இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்!


இது போன்ற அநீதிக்கெதிராக அனைத்து வகையிலும் நமது போராட்டங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்! 


ஜஸாக்கல்லாஹ்  ஹைரா!


இப்படிக்கு :

TNTJ - திருப்பூர் மாவட்ட நிர்வாகம்

Tuesday, February 08, 2022

கண்டன ஆர்ப்பாட்ட அவசர ஆலோசனைக்கூட்டம் _ பெரியதோட்டம் 07022022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  பெரிய தோட்டம்,   கோம்பைத்தோட்டம்,  VSAநகர், செரங்காடு, யாசின் பாபு நகர், திருநகர் ஆகிய கிளைகளின்    ஒருங்கிணைந்த அவசர ஆலோசனைக்கூட்டம் 

 07/02/2022  அன்று இரவு  பெரியதோட்டம் மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர்  ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், 
மாவட்ட துணைச் செயலாளர் ஹனீபா, மாவட்ட துணைச் செயலாளர் ரபீக், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதில்  
கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும், பாசிச பாஜக அரசையும் கண்டித்து

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக எதிர்வரும் 11/02/2022 அன்று இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள் மக்கள் மத்தியில் இந்த அநீதி பற்றி பிரச்சாரம் செய்யவும், கண்டன ஆர்பாட்டத்திற்காக செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும்,

அநீதிக்கு எதிராக, மக்களின் உரிமையை காக்கும் போராட்டத்திற்காக பெருவாரியான மக்களை திரட்டி வரவும் வலியுறுத்தப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்

சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு 07/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு   07/02/2022 அன்று  
சின்னவர் தோட்டம் கிளை மர்கஸில்
 மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், 
மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 கிளை நிர்வாக செயல்பாடுகள், மர்கஸ் கட்டுமாணப்பணிகள்  மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக எதிர்வரும் 11/02/2022 அன்று இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி விளக்கம் வழங்கி,

கிளை நிர்வாகிகள் மக்கள் மத்தியில் இந்த அநீதி பற்றி பிரச்சாரம் செய்யவும், கண்டன ஆர்பாட்டத்திற்காக செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

Monday, February 07, 2022

கண்டன ஆர்ப்பாட்ட அவசர ஆலோசனைக்கூட்டம் _ மங்கலம் 07022022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 
மங்கலம், R.P நகர், இந்தியன் நகர், சின்னவர் தோட்டம், VKP, அவினாசி, பல்லடம் ஆகிய கிளைகளின்    ஒருங்கிணைந்த அவசர ஆலோசனைக்கூட்டம் 

 07/02/2022  அன்று இரவு  மங்கலம் மர்கஸில்  மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், 
மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதில்  
கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும், பாசிச பாஜக அரசையும் கண்டித்து

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக எதிர்வரும் 11/02/2022 அன்று இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது.

கிளை நிர்வாகிகள் மக்கள் மத்தியில் இந்த அநீதி பற்றி பிரச்சாரம் செய்யவும், கண்டன ஆர்பாட்டத்திற்காக செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும்,

அநீதிக்கு எதிராக,
மக்களின் உரிமையை காக்கும் போராட்டத்திற்காக பெருவாரியான மக்களை திரட்டி வரவும் வலியுறுத்தப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்ப்பாட்ட அவசர ஆலோசனைக்கூட்டம் _ உடுமலை 07022022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 
உடுமலை, சாதிக் நகர், மடத்துக்குளம் ஆகிய கிளைகளின்    ஒருங்கிணைந்த அவசர ஆலோசனைக்கூட்டம் 

 07/02/2022  அன்று  உடுமலை மர்கஸில் மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான்  அவர்கள் தலைமையில், 
 மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஷீத் மற்றும் மாணவரணி செயலாளர் முஹம்மது தன்வீர் ஆகியோர்  முன்னிலையில் நடைபெற்றது.

அதில்  கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்து, அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகங்களையும் பாசிச பாஜக அரசையும் கண்டித்து

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக எதிர்வரும் 11/02/2022 அன்று இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி விளக்கம் வழங்கப்பட்டது.

மேலும் கிளை நிர்வாகிகள் மக்கள் மத்தியில் இந்த அநீதி பற்றி பிரச்சாரம் செய்யவும், 

கண்டன ஆர்பாட்டத்திற்காக செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும்,

அநீதிக்கு எதிராக, மக்களின் உரிமையை காக்கும் போராட்டத்திற்காக பெருவாரியான மக்களை திரட்டி வரவும் வலியுறுத்தப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்

கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் 06/02/2022 ஞாயிறு அன்று மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை உடுமலை  கிளை தவ்ஹீத் பள்ளியில் கல்வி  வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

 


மாநில மாணவரணி சகோதரர். ஷமீம் அவர்கள் “மாணவ மாணவியர்கள் என்னென்ன  படிப்புகளை தேர்வு செய்து படித்தால் வருங்காலத்தில் முன்னேற்றம் அடையலாம் என்றும்,

எந்தெந்த படிப்புகளுக்கு இந்திய, உலக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளது என தெளிவான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் சுமார் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் தமது பொறுப்பாளர்களுடன் கலந்து தெளிவான வழிகாட்டுதல்கள் பெற்று சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 

கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் _ இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவரணி சார்பில் 06/02/2022 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்தியன் நகர் கிளை தவ்ஹீத் பள்ளியில் கல்வி  வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.


மாநில மாணவரணி சகோதரர். ஷமீம் அவர்கள் “மாணவ மாணவியர்கள் என்னென்ன  படிப்புகளை தேர்வு செய்து படித்தால் வருங்காலத்தில் முன்னேற்றம் அடையலாம் என்றும்,

எந்தெந்த படிப்புகளுக்கு இந்திய, உலக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளது என தெளிவான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கினார்கள்.

 

இந்த நிகழ்வில் சுமார் 70 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் தமது பொறுப்பாளர்களுடன் கலந்து தெளிவான வழிகாட்டுதல்கள் பெற்று சென்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

 

Sunday, February 06, 2022

ஹிஜாப் ஆர்ப்பாட்ட_ மாவட்ட நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் 06/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  நிர்வாகக்குழு அவசரக்கூட்டம் 06/02/2022 அன்று இரவு இந்தியன் நகர் மர்கஸில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில்  நடைபெற்றது.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது எனும் பாசிச செயலை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இன்ஷாஅல்லாஹ் வரும் 11/02/2022 வெள்ளி மாலை
 நடத்த முடிவு செய்து.


1) ஆர்ப்பாட்டத்திற்கான பணிகள் குறித்து பேசப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் 

2) திருப்பூர் நகர கிளைகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்திற்கான மண்டல ஒருங்கிணைப்பு மசூரா நடத்துவது எனவும் 

3) மங்கலம் சுற்றுவட்டார கிளைகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டத்திற்கான மண்டல ஒருங்கிணைப்பு மசூரா நடத்துவது எனவும் 

4) ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது  எனவும் முடிவுகள் எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் (5) 05/02/22


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மக்தப் மதரஸா மேம்பாட்டு குழு ஆலோசனைக் கூட்டம் (5) 05/02/22 அன்று இரவு இந்தியன் நகர் கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர் யாஸர் அராபத் தலைமையில் நடைபெற்றது.



இதில்

1. மக்தப் மதரஸா பாடம் நடத்தும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

2.யஸ்ஸர்னல் குர்ஆன் படிக்கும் மாணவர்களுக்கு பேனர் மூலமா பாடங்களை நடத்த ஆலோசிக்கப்பட்டது.

3.8வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு மழலையர் பள்ளியில் நடத்தப்படும் பாட முறை போன்று நடத்த  ஆலோசிக்கப்பட்டது.

4.மக்தப் மதரஸா மேம்பாட்டு தொகுப்பை விரைவாக முடிக்க ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்