Tuesday, February 08, 2022

சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு 07/02/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  சின்னவர் தோட்டம் கிளை சந்திப்பு   07/02/2022 அன்று  
சின்னவர் தோட்டம் கிளை மர்கஸில்
 மாவட்ட தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில், 
மாவட்ட செயலாளர் யாஸர் அரபாத், மாவட்ட துணைச் செயலாளர் நூர்தீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 கிளை நிர்வாக செயல்பாடுகள், மர்கஸ் கட்டுமாணப்பணிகள்  மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் வருங்காலத்தில் தாவா பணிகள் சமுதாய சமூக சேவைப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக எதிர்வரும் 11/02/2022 அன்று இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும் அவசியமும் பற்றி விளக்கம் வழங்கி,

கிளை நிர்வாகிகள் மக்கள் மத்தியில் இந்த அநீதி பற்றி பிரச்சாரம் செய்யவும், கண்டன ஆர்பாட்டத்திற்காக செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ் 

No comments:

Post a Comment