Friday, April 01, 2022

மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம்_01/04/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 01/04/2022 அன்று மாலை 6:00 மணி முதல் நிர்வாகக் குழுக் கூட்டம்
மாவட்ட மர்கஸில் மாவட்ட தலைவர். சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துள்ள பணிகள் பற்றியும் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்  பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ரமலான் மாதத்தில்  மாவட்ட மர்கஸ் மற்றும் அனைத்து கிளை மர்கஸ்களில், இரவு தொழுகை நடத்த இமாம், இரவு பயான் தாயிகள் நியமிக்கப்பட்டது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.



மாவட்ட மர்கஸ் பகுதியில் பெண்கள் தாவா குழு உருவாக்குவது என்றும்,

மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தில்,

 இன்ஷாஅல்லாஹ் ரமலானுக்கு பிறகு வரும் கல்வியாண்டில் ஒரு வருட ஆலிமா வகுப்பு, 3 மாத தீனியாத் வகுப்புடன், குடும்ப சூழ்நிலையால்  முழு நேர தினசரிவகுப்பில் கலந்து பயில இயலாத மகளிர்களுக்கு காலை 10:30 முதல் 1:00 மணி வரையிலான சிறப்பு வகுப்பு ஆரம்பம் செய்வது என்றும்,

இந்த வகுப்புகளுக்கான மகளிர் மாணவியர் சேர்க்கைக்கு, நகர கிளை நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தும், 
பெண்கள் தாவா குழு வாயிலாகவும்,
 பிளக்ஸ் நோட்டீஸ்  மூலமாகவும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 

கிளைகளின் செயல்பாடுகளை கண்காணித்து தாவாப்பணிகள், சமூக சேவைப்பணிகளை சிறப்பாக செயல்படுத்த கிளைப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.



பெரியகடை வீதி கிளை _ திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ மர்கஸ் துவக்கம் _ 01/04/2022


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
 சார்பாக  01/04/2022 அன்று பெரியகடை வீதி கிளை புதிய  மர்கஸ் ( 71, நொய்யல் வீதி, திருப்பூர்) ல்

 நபிவழியில்  ஜும்ஆ  (திருப்பூர் மாவட்ட 29 வது ஜும்ஆ) மர்கஸ்




சகோதரர். யாஸர் அராபத் ( மாவட்ட செயலாளர்) அவர்கள் ஜும்ஆ உரையுடன், சகோதரர். ரஹ்மத்துல்லாஹ் பாகவி ( பெரிய கடை வீதி கிளை தலைவர்) அவர்கள் இமாமத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, March 30, 2022

அறிவொளிநகர் கிளை சந்திப்பு 30/03/2022

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவொளிநகர் கிளை சந்திப்பு
   30/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட  தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட மாணவரணி செயலாளர் தன்வீர் அவர்கள் முன்னிலையில், அறிவொளிநகர் கிளையில் நடைபெற்றது.


 

அறிவொளிநகர் கிளை சார்பில் மர்கஸ் அமைத்து ஜும்ஆ ஆரம்பிக்கவும், ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப் மதரசா அமைக்கவும் எடுத்த  முன்னேற்பாடுகளை   கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு 29/03/2022

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பெரியகடை வீதி கிளை நிர்வாக சந்திப்பு   29/03/2022 அன்று இஷாவிற்கு பிறகு மாவட்ட  துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைச்செயலாளர் ஹனிபா மற்றும் மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.

 

 



பெரியகடை வீதி கிளை சார்பில் நொய்யல் வீதியில் மர்கஸ் அமைத்து ஜும்ஆ மீண்டும் ஆரம்பிக்கவும், ரமலான் மாத செயல்பாடுகள் மற்றும் மக்தப் மதரசா அமைக்கவும் எடுத்த  முன்னேற்பாடுகளை   கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

ரமலான் மாத செயல்பாடுகள், சமுதாயப் பணிகள்,  தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

 

அல்ஹம்துலில்லாஹ்

 

 

Monday, March 28, 2022

செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை பொதுக்குழு 28/03/2022 அன்று  பஜ்ருக்கு பின்   செரங்காடு கிளை மர்கஸில்

மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் தலைமையில்மாவட்ட துணைச் செயலாளர் ரபீக் அவர்கள்  முன்னிலையில்  நடைபெற்றது. 

 

கிளையின் செயல்பாடுகளை வீரியப்படுத்த நிர்வாக சீரமைப்பு கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கிளை நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து நிர்வாக சீரமைப்பு  செய்து கீழ்கண்ட நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.


 செரங்காடு கிளையின் புதிய நிர்வாக குழு விபரம்

 

தலைவர்: அபூதாஹிர் 7010939340

செயலாளர்: ஜெய்லாபுதீன் 9600076591

பொருளாளர்: ரஃபீக்  9842396498

துணைத்தலைவர்: ஹபீப் ராஜா   9524233786

துணைச்செயலாளர்: அப்துல் ரவூஃப்  8870881285


தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாக குழுவிற்கு  மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்பாக செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

 

Sunday, March 27, 2022

அலங்கியம் சந்திப்பு 27/03/2022


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக அலங்கியம் கிளை சந்திப்பு   27/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட  தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், தாராபுரம் கிளை மர்கஸில் நடைபெற்றது.

 
 இதில் கிளை  செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
ரமலான் மாத செயல்பாடுகள்,
சமுதாயப்பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக தொடர் அநீதிகள்,  ஹிஜாப் தீர்ப்பு, ஆர்ப்பாட்டம், வழக்கு, பற்றிய விபரங்களுக்கு விளக்கம் வழங்கி,
 வருங்காலத்தில் அநீதிக்கு எதிராக சமூகத்திற்கு நியாயத்தையும் பாதுகாப்பையும்  பெற நமது  செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தாராபுரம் கிளை சந்திப்பு 27/03/2022

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக தாராபுரம் கிளை சந்திப்பு   27/03/2022 அன்று பஜ்ருக்கு பிறகு மாவட்ட  தலைவர் சிக்கந்தர் அவர்கள் தலைமையில்,   மாவட்ட துணைச்செயலாளர் ரபீக், அவர்கள் முன்னிலையில், தாராபுரம் மர்கஸில் நடைபெற்றது.

 
 இதில் கிளை   செயல்பாடுகள் மற்றும்  கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
தாராபுரம் கிளை மர்கஸில் மீதமுள்ள கட்டுமாணப் பணிகள், கடன், பொருளாதார விபரங்கள்  கேட்டறிந்து ஆலோசனை மற்றும் வரிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

ரமலான் மாத செயல்பாடுகள்,
சமுதாயப்பணிகள், தாவாபணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
 
இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக தொடர் அநீதிகள்,  ஹிஜாப் தீர்ப்பு, ஆர்ப்பாட்டம், வழக்கு, பற்றிய விபரங்களுக்கு விளக்கம் வழங்கி, வருங்காலத்தில் அநீதிக்கு எதிராக சமூகத்திற்கு நியாயத்தையும் பாதுகாப்பையும்  பெற நமது  செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்