பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
நன்றி அறிவிப்பு!
கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவதை தடைசெய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் பாசிச பாஜக அரசை
கண்டித்தும் திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இறைவனின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
ஆர்ப்பாட்டம் அறிவித்த குறுகிய நாட்களிலேயே கிளை நிர்வாகம் ஆர்ப்பாட்ட அறிவிப்புகளை பல்வேறு வகையில் பொதுமக்களிடம் சேர்க்கும் முகமாக களப்பணியாற்றியுள்ளீர்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் அருளால், ஆர்ப்பாட்டக்களத்தில் பல்லாயிரக்கணக்காண ஆண்களும் பெண்களும் குழந்தைகள் என அனைவரும் பங்கேற்று அநீதிக்கெதிராய் ஆர்ப்பரித்து தங்களது கண்டனங்களை கோஷங்களாக முழக்கமிட்டனர்.
அநீதிக்கெதிரான இந்த ஆர்ப்பாட்ட களத்திற்கு அனைத்து வகையிலும் அர்ப்பணிப்பு செய்த கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தாயீக்கள், பெண்கள் தாஃவா குழுவினர் மற்றும் பொருளாதாரத்தை தந்து உதவிய சகோதரர்களுக்கும் என அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!
நமது உரிமைக்காண போராட்டத்தின் மூலம் ஆளும் ஆட்சியாளர்களின் செவிகளுக்கும், தொடர் மதவெறி போக்கை கைய்யாளும் காவி சங்பரிவாரத்தின் சூழ்ச்சிகளுக்கும் எதிராகவும் படைத்த இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்!
இது போன்ற அநீதிக்கெதிராக அனைத்து வகையிலும் நமது போராட்டங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்!
ஜஸாக்கல்லாஹ் ஹைரா!
இப்படிக்கு :
TNTJ - திருப்பூர் மாவட்ட நிர்வாகம்
No comments:
Post a Comment