Saturday, July 11, 2020

தாராபுரம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 10/07/2020 அன்று மதியம்  தாராபுரம்  கிளை சந்திப்பு,   மாவட்ட  தலைவர்   நூர்தீன்  அவர்கள்    தலைமையில்  



மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான்  மாவட்டதுணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைசெயலாளர்கள் அப்துர்ரஷீத், ஷேக் பரீத், சித்திக், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி மற்றும் மாவட்ட மருத்துவஅணி செயலாளர் அப்பாஸ்
ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.


கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்  பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

குறிப்பாக ஜும்ஆ தொழுகை பற்றிய வழிகாட்டல், கூட்டு குர்பானி, மற்றும் பள்ளி கட்டுமானப்பணிகள் பற்றிய பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தாக்கம் வீரியமாக உள்ளதால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து இலவச விநியோகம் செய்ய மருத்துவ அணி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. 

  
கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.




தொடர்ந்து தாராபுரம் கிளை மர்கஸ் கட்டுமாணப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment