Thursday, July 09, 2020

யாசீன் பாபு நகர் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக, 09/07/2020 அன்று காலை யாசீன் பாபு நகர் கிளை சந்திப்பு    யாசீன் பாபு நகர்  கிளை  மர்கஸில்,   மாவட்ட செயலாளர்  
ஜாகிர் அப்பாஸ்  அவர்கள்    தலைமையில்   

மாவட்ட துணை செயலாளர்   ஷேக் பரீத் , மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் இம்ரான் ஆகியோர் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்டு நடைபெற்றது.




கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கிளை சார்பில் செய்த சமுதாயப்பணிகளை கேட்டறிந்து, இனி வருங்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் உதவிகள் பற்றி பல்வேறு ஆலோசனைகள் கிளை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.


மேலும்  கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்   பற்றியும் இனி செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
  

கலந்துகொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

கூடுதலாக கிளை பகுதியை சார்ந்த குருவம்பாளையம் பகுதியில் உள்ள கொள்கை சகோதரர்களை சந்தித்து தாவா பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment