தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 09/10/2020 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்,
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ் , மாவட்ட பொருளாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணைத் தலைவர் யாசர் அரபாத், துணைச் செயலாளர்கள் சேக் பரீத், அப்துர்ரஷீத், ரபீக்,
மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜெய்லானி , மற்றும் மாவட்ட வர்த்தகரணி செயலாளர் ஜாகிர் ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்றது
கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும் இனி செய்யவேண்டிய பணிகள் பற்றியும் விரிவாக தகவல் பரிமாறப்பட்டது.
மாவட்ட நிர்வாகம்
சார்பில் இயங்கும் அல்கைராத் பெண்கள் கல்வியகத்தின் தேவைகளை பற்றி ஆலோசித்து, உடனடியாக தேவைகளை
பூர்த்தி செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டது.
தேனி மாவட்ட மர்கஸ் பணிகளுக்கு
இந்தமாத மூன்றாம் வார (16/10/2020 ) ஜும்ஆ வசூல் செய்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள கிளைகள் சார்பில் சமூக சேவைப்பணிகள் , தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்த கிளை பொறுப்பாளர்களுக்கு நிர்வாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


No comments:
Post a Comment