NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் எனும் அறிவிப்பை தொடர்ந்து
திருப்பூரில் மாவட்ட சிறை முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளைசந்திப்பு 11/03/2020 காலை 6:30முதல் அனுப்பர்பாளையம் மர்கஸில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், அவர்கள் கலந்து கொண்டு,
அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைப்பது என்றும்,
நிர்வாகிகள் பேச்சாளர்கள் நமது செயல்பாடுகளை எவ்வாறெல்லாம் அமைத்து சமுதாய நலனுக்கு சேவைகள் செய்வது என்பது பற்றியும்,
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment