Wednesday, March 11, 2020

5 கிளைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 10/03/2020


NPR ஐ தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுருத்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநிலம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் மார்ச் 18 சிறை நிரப்பும் போராட்டம் எனும்  அறிவிப்பை தொடர்ந்து

திருப்பூரில் மாவட்ட சிறை  முன்பாக சிறை நிரப்பும் போராட்டம் முடிவு செய்யப்பட்டது.

அதற்காக *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருப்பூர் மாவட்டம் மங்கலம், இந்தியன் நகர், VKP, RP நகர் மற்றும் சின்னவர் தோட்டம் ஆகிய 5 கிளைகளின் கூட்டு ஆலோசனைக் கூட்டம் 10/03/2020 இரவு 9:30முதல் இந்தியன் நகர் மர்கஸில் நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் நூர்தீன், மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர் ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,

அநீதிக்கு எதிரான நமது போராட்டங்களை எவ்வாறு அணைத்து சமுதாய மக்களுக்கும் நலன் ஏற்படும் வகையிலும், அரசுதுறைகளின் கவனத்தை பெரும் வகையில் அமைப்பது என்றும்,

உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், உரிமைகளை வென்றெடுப்பதற்கு இறைவனின் உதவியுடன் இறைதூதரின் வழிகாட்டுதல்களை மீறாமல், முஸ்லிமாகவே இருந்து போராடுவது என்றும், 

நமது நோக்கம் அநியாய சட்டங்கள் நீக்கப்பட்டு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அணைத்து சமுதாய மக்களும் அமைதியாக இந்தியாவில் வாழ வழிவகை ஏற்படுத்துவதே என்றும்,

அமைதியை குலைக்கும் வகையில் சமூக எதிரிகள் யார் செயல்பட்டாலும் நாம் சரியான வழிகாட்டுதலுடன் ஜனநாயக அடிப்படையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்றும்,
பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment