Thursday, October 14, 2021

கிளை சந்திப்பு (22) 13102021 _ யாசீன் பாபு நகர் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக,  13/10/2021அன்று இரவு 9:00மணிக்கு யாசீன் பாபு நகர் கிளை சந்திப்பு



மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் கிளை மர்கஸில் நடைபெற்றது.

கிளை சார்பில் நடைபெற்ற தாவா பணிகள்இனி செயல்படுத்த வேண்டிய  பணிகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி  செயல்பட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. 

1. பெண்கள் தாவா குழுவை உருவாக்கவும்,

2. மக்தப் மதரஸா மாணவ மாணவிகளுக்கு யூனிபார்மாக ஐடி புர்கா மக்கனா பேக் தரவும்

3 . மக்தப் மதரஸா வுக்கு  அதிகமாக மாணவ மாணவிகள் சேர்க்க தாவா செய்வது ...

4. தொழுகை, ஷிர்க், புகையிலை, மதரஸா மார்க்ககல்வி பற்றி மக்களிடம்  தனிநபர் தாவா செய்தல்.

5.பெண்கள்பயான் மற்றும் பெற்றோர் சந்திப்பு செய்வது குறித்தும்,

6.பொது மசூரா மற்றும் நிர்வாக மசூரா செய்வது குறித்தும் .

7.மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும்

8.பொருளாதார பற்றாகுறை தீர்வுக்கு பேஸ்புக் வாட்ஸ்அப் குரூப்புகளில் தாவாக்களை பதிவு செய்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


கலந்து கொண்ட சகோதரர்கள் ஆர்வமுடன்   கருத்துக்களை பரிமாறி  உடனடியாக நன்மையான செயல்பாடுகளில் ஒத்துழைக்க  வாக்களித்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

 

No comments:

Post a Comment