தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 04/02/2022 அன்று மாலை 5:00 மணி முதல் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும்
மாவட்ட மாணவரணி சார்பில் இரண்டு இடங்களில் இன்ஷாஅல்லாஹ் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் முகாமிற்கு பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த வாரம் நடைபெறவுள்ள இஸ்லாம் ஒரு எளியமார்க்கம், தர்பியா, மருத்துவணி முகாம், உள்ளிட்ட கிளை நிகழ்ச்சிகளுக்கு பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது எனும் பாசிச செயலை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment